Monday, March 14, 2011

கோவை செழியன் அய்யா அவர்களின் 11 ம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் பொது கூட்டம்


காங்கேயம் அடுத்தே  உள்ள  குங்கேரிபாளயத்தில்  மறைந்த  நமது  தலைவர்  அமரர்  கோவை செழியன் அய்யா அவர்களது  11 ம் ஆண்டு  நினைவஞ்சலி   காலை  11  மணிக்கு  நடைபெற்றது .. கூட்டத்திற்கு  நமது கழக  தலைவர் கொங்கு நாட்டு  காவலர்  திரு பெஸ்ட்  ராமசாமி  ஐயா , கழக செயலாளர் எழுச்சி  நாயகன் திரு E .R . ஈஸ்வரன் அண்ணன் ,  கழக பொருளாளர்  மக்கள்  நாயகன்  திரு  பாலசுப்ரமணியம் , காங்கேயம் சட்டமன்ற  தொகுதி  MLA  திரு . விடியல்  சேகர்  மற்றும்  மாநில , மாவட்ட , ஒன்றிய , கிளை  நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர் . அவினாசி  ஒன்றியம்  சார்பிலே  V.லோகநாதன் ( ஒன்றிய  செயலாளர் )   , A . ரவி சங்கர்( ஒன்றிய மாணவரணி ) உள்பட 30 பேர்  கலந்து கொண்டனர் .. 
  
பிறகு  நமது தலைவர்கள்  மறைந்த  நமது  அமரர்  கோவை செழியன்  அவர்களுக்கு  அஞ்சலி  செலுத்தினார்கள் . 
பின்னர்  நினைவஞ்சலி  கூட்டம்  நடைபெற்றது  ..கூட்டத்தில்  தலைமை  நிலைய செயலாளர்  சூர்யமூர்த்தி  வரவேற்புரை  வழங்கினார் .. பின்னர்  
காங்கேயம் சட்டமன்ற  தொகுதி  MLA  திரு . விடியல்  சேகர்    சிறப்புரையாற்றினார் பின்னர்  கழக தலைவர் கொங்கு நாட்டு  காவலர்  
திரு பெஸ்ட் ராமசாமி ஐயா , கழக செயலாளர் எழுச்சி  நாயகன் திரு E .R . ஈஸ்வரன் அண்ணன் ,  கழக பொருளாளர்  மக்கள்  நாயகன்  திரு  பாலசுப்ரமணியம் அவர்கள்  பேருரையற்றினார்கள்.. பிறகு 2  மணியளவிலே  நினைவஞ்சலி  கூட்டம்  நிறைவுபெற்றது .....


No comments:

Post a Comment