Thursday, March 3, 2011

திமுக வுடன் கொமு க கூட்டணி



 மார்ச் 3 : கொங்கு நாட்டு காவலர்  மரியாதைக்குரிய  திரு . பெஸ்ட் ராமசாமி  அய்யா  அவர்களும்  நமது   கொங்கு நாட்டு தளபதி  திரு . E .R .ஈஸ்வரன்  அண்ணன்  அவர்களும்  நமது  கழக  பொருளாளர்   திரு. பாலசுப்ரமணியம்  அண்ணன்  அவர்களது முன்னிலையில்  நமது கட்சியின்  கூட்டணி பற்றி  திமுக வுடனும் ஆதிமுக வுடனும்  கடந்த  1  மாத காலம்  நடைபெற்றது.
                                                                                                            
                                                                                                              ஆதிமுக தரப்பிலே  நமக்கு  3  சட்ட மன்ற தொகுதிகள்  தருவதாக கூறினர் , ஆனால்  நாம் கேட்ட தொகுதிகளை  தர மறுத்துவிட்டனர் ..     திமுக  தரப்பிலே  நமக்கு  5   சட்ட மன்ற தொகுதிகள் தருவதாக கூறினர் , அதுவும் நாம் கேட்ட தொகுதிகளை தருகின்றோம்  என்றும்  நமது கோரிக்கையையும் அவர்கள்  ஏற்றுகொண்டார்கள்  . பிறகு இரு கட்சிகளுடனும்  சுமார் 1  மாத காலம்  பேச்சுவார்த்தை  நடத்தினார்கள் ....கடந்த மார்ச் 1 ம்  தேதி  தேர்தல் நாள்( ஏப்ரல் 13 )  வெளியிடப்பட்டது . பிறகு மார்ச் 2 ம்  நாள் நமது கூட்டணி பற்றி  சென்னையில்   மாநில பொது குழு  கூட்டம்  நடைபெற்றது ....இறுதியில்
திமுக  வுடன்  கூட்டணி  என்று  நமது கட்சி தலைவர்கள்  முடிவெடுத்தனர் .

                                                                            அன்று  இரவு 11  மணி அளவில்  கலைஞரின்  இல்லத்திற்கு   சென்று  நமது  தலைவர்  திரு . பெஸ்ட் ராமசாமி  அய்யா அவர்கள் கூட்டணி  ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டார் ....

  திமுக வில்   நமக்கு  7   சட்ட மன்ற தொகுதிகள் + 1 சட்ட மேலவை உறுப்பினர் (MLC) சீட்டுகள்   நமக்கு  ஒதுக்கப்பட்டுள்ளது ....

No comments:

Post a Comment