மார்ச் 3 : கொங்கு நாட்டு காவலர் மரியாதைக்குரிய திரு . பெஸ்ட் ராமசாமி அய்யா அவர்களும் நமது கொங்கு நாட்டு தளபதி திரு . E .R .ஈஸ்வரன் அண்ணன் அவர்களும் நமது கழக பொருளாளர் திரு. பாலசுப்ரமணியம் அண்ணன் அவர்களது முன்னிலையில் நமது கட்சியின் கூட்டணி பற்றி திமுக வுடனும் ஆதிமுக வுடனும் கடந்த 1 மாத காலம் நடைபெற்றது.
ஆதிமுக தரப்பிலே நமக்கு 3 சட்ட மன்ற தொகுதிகள் தருவதாக கூறினர் , ஆனால் நாம் கேட்ட தொகுதிகளை தர மறுத்துவிட்டனர் .. திமுக தரப்பிலே நமக்கு 5 சட்ட மன்ற தொகுதிகள் தருவதாக கூறினர் , அதுவும் நாம் கேட்ட தொகுதிகளை தருகின்றோம் என்றும் நமது கோரிக்கையையும் அவர்கள் ஏற்றுகொண்டார்கள் . பிறகு இரு கட்சிகளுடனும் சுமார் 1 மாத காலம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் ....கடந்த மார்ச் 1 ம் தேதி தேர்தல் நாள்( ஏப்ரல் 13 ) வெளியிடப்பட்டது . பிறகு மார்ச் 2 ம் நாள் நமது கூட்டணி பற்றி சென்னையில் மாநில பொது குழு கூட்டம் நடைபெற்றது ....இறுதியில்
திமுக வுடன் கூட்டணி என்று நமது கட்சி தலைவர்கள் முடிவெடுத்தனர் .
அன்று இரவு 11 மணி அளவில் கலைஞரின் இல்லத்திற்கு சென்று நமது தலைவர் திரு . பெஸ்ட் ராமசாமி அய்யா அவர்கள் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ....
திமுக வில் நமக்கு 7 சட்ட மன்ற தொகுதிகள் + 1 சட்ட மேலவை உறுப்பினர் (MLC) சீட்டுகள் நமக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ....
No comments:
Post a Comment