Tuesday, March 22, 2011

2011 சட்டமன்றத் தேர்தலில் , கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்

            சூலூர்  சட்டமன்றத்  தொகுதி  வேட்பாளர் 



பெயர்                  :        E .R .ஈஸ்வரன்  B.E .,                                                     
வயது                  :        50 
பெற்றோர்         :       இராமசாமி கவுண்டர் - முத்தாயி
மனைவி            :       திருமதி. நளினி  ஈஸ்வரன் 
குழந்தைகள்     :      சுஷ்மிதா , ஸ்வருபா
தொழில்             :       கட்டுமானம் , ஏற்றுமதி  ஆடை தயாரிப்பு 
கல்வி தகுதி     :       B.E .,  (Mech ) 





பெயர்                      :             K . பாலசுப்ரமணியம்                                             
வயது                      :             61
பெற்றோர்             :             P .P .கந்தசாமி கவுண்டர் - கந்தம்மாள் 
மனைவி                :             திருமதி . பத்மா
குழந்தைகள்         :             பிரபு , கார்த்திக்
தொழில்                 :             கனரக இயந்திர பாகம் , கோழி பண்ணை
கல்வி தகுதி         :             Engineer 


நாமக்கல்  சட்டமன்ற தொகுதி  வேட்பாளர் 


பெயர்                   :         R . தேவராசன்                                                   
வயது                   :         70
பெற்றோர்          :        போத்தி. இராமசாமிகவுண்டர்  - காளியம்மாள்
மனைவி             :        திருமதி . பழனியம்மாள்
குழந்தைகள்      :        இரு மகள்கள் , ஒரு மகன்
தொழில்              :         கட்டுமானத் தொழில் , டிரான்ஸ்போர்ட் 

     
  பெருந்துறை  சட்டமன்ற  தொகுதி  வேட்பாளர் 


பெயர்                      :        K .K .C . பாலு
வயது                      :        50
பெற்றோர்             :       K .K .C .சென்னியப்பன் - சரஸ்வதி
மனைவி                :       திருமதி .சித்திரகலா 
குழந்தைகள்         :       நந்தா 
தொழில்                 :       K .K .C . ட்ரான்ஸ்போர்ட்
கல்வி தகுதி         :       B.E ., ( ECE )


பொள்ளாச்சி  சட்டமன்ற  தொகுதி  வேட்பாளர் 


பெயர்                      :       நித்யானந்தம் 
வயது                      :      39
பெற்றோர்             :      B.கிருஷ்ணசாமி கவுண்டர்  
மனைவி                :      திருமதி. வனிதா 
குழந்தைகள்         :      ஷிவாணி
தொழில்                 :      ரியல் எஸ்டேட் , விவசாயம் 
கல்வி தகுதி         :     D.M.E ., B.E 
உடுமலை சட்டமன்ற  தொகுதி  வேட்பாளர் 


பெயர்                      :      T. இளம்பரிதி
வயது                      :      50
பெற்றோர்             :     தி . திருமலைசாமிக் கவுண்டர் 
மனைவி                :     திருமதி . சாந்தி
குழந்தைகள்         :    கோகுல் 
தொழில்                 :     விவசாயம்
கல்வி தகுதி         :     D.M.E ., B.E


Wednesday, March 16, 2011

கொங்குநாடு முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள்

மார்ச் 16 : கொமுக போட்டியிடும் தொகுதிகள்  இரவு 8  மணிக்கு  சென்னை  அண்ணா அறிவாலயத்தில் வெளியிடப்பட்டது . இதில்  கொமுக வுக்கு

1 . சூலூர்
2 .பல்லடம்
3 . பொள்ளாச்சி
4 .உடுமலைபேட்டை
5 .பெருந்துறை
6 .கோபி
7 .நாமக்கல்
ஆகிய  தொகுதிகள்  ஒதுக்கப்பட்டன ..வேட்பாளர்  பட்டியலை  நாளை அல்லது  நாளை மறுநாள்  வெளியிடப்படும்  என  கொமுக மாநில தலைவர்  திரு.பெஸ்ட் ராமசாமி  கூறினார் .....

 

திமுக வுடன் கூட்டணி ஏன்- மாநில கொமுக பொருளாளர் விளக்கம்

Monday, March 14, 2011

கோவை செழியன் அய்யா அவர்களின் 11 ம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் பொது கூட்டம்


காங்கேயம் அடுத்தே  உள்ள  குங்கேரிபாளயத்தில்  மறைந்த  நமது  தலைவர்  அமரர்  கோவை செழியன் அய்யா அவர்களது  11 ம் ஆண்டு  நினைவஞ்சலி   காலை  11  மணிக்கு  நடைபெற்றது .. கூட்டத்திற்கு  நமது கழக  தலைவர் கொங்கு நாட்டு  காவலர்  திரு பெஸ்ட்  ராமசாமி  ஐயா , கழக செயலாளர் எழுச்சி  நாயகன் திரு E .R . ஈஸ்வரன் அண்ணன் ,  கழக பொருளாளர்  மக்கள்  நாயகன்  திரு  பாலசுப்ரமணியம் , காங்கேயம் சட்டமன்ற  தொகுதி  MLA  திரு . விடியல்  சேகர்  மற்றும்  மாநில , மாவட்ட , ஒன்றிய , கிளை  நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர் . அவினாசி  ஒன்றியம்  சார்பிலே  V.லோகநாதன் ( ஒன்றிய  செயலாளர் )   , A . ரவி சங்கர்( ஒன்றிய மாணவரணி ) உள்பட 30 பேர்  கலந்து கொண்டனர் .. 
  
பிறகு  நமது தலைவர்கள்  மறைந்த  நமது  அமரர்  கோவை செழியன்  அவர்களுக்கு  அஞ்சலி  செலுத்தினார்கள் . 
பின்னர்  நினைவஞ்சலி  கூட்டம்  நடைபெற்றது  ..கூட்டத்தில்  தலைமை  நிலைய செயலாளர்  சூர்யமூர்த்தி  வரவேற்புரை  வழங்கினார் .. பின்னர்  
காங்கேயம் சட்டமன்ற  தொகுதி  MLA  திரு . விடியல்  சேகர்    சிறப்புரையாற்றினார் பின்னர்  கழக தலைவர் கொங்கு நாட்டு  காவலர்  
திரு பெஸ்ட் ராமசாமி ஐயா , கழக செயலாளர் எழுச்சி  நாயகன் திரு E .R . ஈஸ்வரன் அண்ணன் ,  கழக பொருளாளர்  மக்கள்  நாயகன்  திரு  பாலசுப்ரமணியம் அவர்கள்  பேருரையற்றினார்கள்.. பிறகு 2  மணியளவிலே  நினைவஞ்சலி  கூட்டம்  நிறைவுபெற்றது .....


Thursday, March 10, 2011

கொங்குநாடு முன்னேற்ற கழகம் அறிவிப்பு


கொமுக  தலைவர் பெஸ்ட் S . ராமசாமி 100 கோடி, பொது செயலாளர் ER
ஈஸ்வரன் 100 கோடி மற்றும் சக்கரை ஆலை லைசென்ஸ் & சாராய ஆலை லைசென்ஸ்
பெற்றுக் கொண்டு தி.மு.க.,வுடன் கூட்டணி என்று சிலர் செய்திகளை பரப்பினர்,
இந்த புகார்களை நிருபித்தால் 10 கோடி பரிசு மற்றும் தலைவர், செயலாளர்
பதவியிலிருந்து விலகத்தயார்...
 

Wednesday, March 9, 2011

கொங்கு வேளாளர் கூட்டங்கள்

 மரத்தின் கிளைகளாக பரந்து விரிந்து குலப்பெயர்களை அறியலாம். அவை,
அகினி
அனஙன்
அந்துவன்
ஆதித்ர்ய கும்பன்
ஆடை
ஆதி
ஆதிரை
ஆவன்
ஆந்தை
ஆரியன்
அழகன்
பரதன்
ப்ரம்மன்
செல்லம்
தேவேந்தரன்
தனஜயன்
தனவந்தன்
ஈன்சென்
என்னை
இந்தரன்
காடன்
காடை
காரி
காவலர்
கடுந்துவி
கலிஞி
கம்பன்
கனவாலன்
கண்ணன்
கன்னாந்தை
கருன்கண்ணன்
கௌரி
காவலன்
கிளியன்
கீரன்
கோடரஙி
கூரை
குருப்பன்
கொட்ராந்தை
கொட்டாரர்
கோவர்
கோவேந்தர்
குமராந்தை
குண்டலி
குண்குலி
குனியன்
குனுக்கன்
குயிலன்
குழயான்
மாடை
மாதமன்
மாதுலி
மாவலர்
மணியன்
மயிலன்
மழ்உழகர்
மெதி
மீனவன்
மொய்ம்பன்
மூலன்
மூரியன்
முக்கண்ணன்
முனைவீரன்
முத்தன்
முழுகாதன்
நாரை
நந்தன்
நீலன்
நெட்டை மணியன்
நீருன்னி
நெய்தாலி
நெரியன்
ஓதாலர்
ஒழுக்கர்
பாலியன்
பாம்பன்
பானன்
பாண்டியன்
பாதாரய்
பதுமன்
படுகுன்னி
பைதாலி
பனையன்
பனங்காடன்
பஞ்சமன்
பன்னை
பன்னன்
பாமரன்
பவளன்
பயிரன்
பெரியன்
பெருங்குடி
பிள்ளன்(Natrayan & Nachimuthu Temple)
பொடியன்
பொன்னன்
பூச்சாதை
பூதியன்
பூசன்
பொருள்தந்தான்
புன்னை
புதன்
சாத்தாந்தை
சத்துவராயன்
சனகன்
சேடன்
செல்லன்
செம்பொன்
செம்பூத்தான்
செம்பன்
செங்கன்னன்
செங்குன்னி
சேரலன்
சேரன்
சேவடி
செவ்வயன்
சிலம்பன்
சோமன்
சூலன்
சூரியன்
சோதி
செளரியன்
சுரபி
தனக்கவன்
தவளையன்
தளிஞ்சி
தேமான்
தோடை
தூரன்
தொரக்கன்
தன்டுமன்
உவனன்
வாணன்
வணக்கன்
வெளையன்
வெளம்பன்
வெந்தை
வெந்துவன்
விளியன்
வில்லி
விளோசனன்
விரதன்
விரைவுளன்
என்பனவாகும்.
[தொகு]நாட்டுக்கவுண்டர்

செல்லன், விழியன், கண்ணன், பனையன், மணியன் குலத்தவர்களில் சிலர் மட்டும் வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து பின்னாளில் கொங்கு நாட்டு வேளாளர் (நாட்டுக்கவுண்டர்) என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் குலப்பிரிவு,
பருத்திப்பள்ளி செல்லன் குலம்
ராசிபுரம் விழியன் குலம்
மல்லசமுத்திரம் விழியன் குலம்
திண்டமங்கலம் விழியன் குலம்
மோரூர் கண்ணன் குலம்
மொளசி கண்ணன் குலம்
வெண்ணந்தூர் கண்ணன் குலம்
ஏழூர் பண்ணை குலம்
வீரபாண்டி மணியன் குலம்
என்று அழைக்கப்படுகிறது.

Tuesday, March 8, 2011

காங்கிரசுக்கு 63 சீட் ஒதுக்க சம்மதித்தது தி.மு.க

சென்னை: "மத்திய அமைச்சரவையிலிருந்து விலகல்' என்ற முடிவை தி.மு.க., எடுத்ததற்கு கோபமடைந்த சோனியா, காங்கிரசுக்கு 63 சீட்கள் வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். வீராப்பு பேசிய தி.மு.க., வேறு வழியின்றி 63 சீட்களை ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளது. தி.மு.க., 61 தொகுதிகளையும், கூட்டணி கட்சிகளுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து இரண்டு தொகுதிகளையும் காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

"காங்கிரசின் அணுகுமுறை, கூட்டணியில் நாம் இருப்பதை விரும்பவில்லை என்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகும். பிரச்னை அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும்' என்று, தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் என மிரட்டினால், காங்., இறங்கி வரும் என எதிர்பார்த்தது தி.மு.க., ஆனால், மவுனம் காத்தது காங்., தி.மு.க.,வின் தீர்மானத்தைத் தொடர்ந்து, அக்கட்சியின் மத்திய அமைச்சர்கள் அழகிரி, பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், நெப்போலியன், காந்திசெல்வன் உள்ளிட்டோர் ராஜினாமா கடிதத்தோடு டில்லி சென்றனர். நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதத்தை தராமல் காலம் தாழ்த்தினர். மத்திய காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல், பிரணாப் முகர்ஜி என ஒவ்வொருவரிடமும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

 இவர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, " பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து கொண்டிக்கும் இந்த நேரத்தில், அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்து நெருக்கடியை ஏன் தருகிறீர்கள்' என்று கேட்டார். மேலும், "இரண்டு கேபினட் அமைச்சர்கள் விலகினால், அதன் பின்னணி என்ன? என்று கேள்வி எழுப்பி, அதற்கு, எதிர்க்கட்சிகள் பிரதமரின் பதிலை பார்லிமென்டில் தாக்கல் செய்யக் கேட்பார்கள். இதனால், தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும்' என்றும் தி.மு.க., அமைச்சர்களிடம், பிரணாப் முகர்ஜி கூறினார்.

 முகர்ஜியின் கேள்விக்கு தி.மு.க., அமைச்சர்கள் பதில் ஏதும் கூற முடியாமல் திணறினர். காங்., தலைவர் சோனியாவை நேற்று முன்தினம் இரவு தி.மு.க., அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போது, "என்னிடம் கூறாமல் அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை ஏன் எடுத்தீர்கள். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஏழு ஆண்டுகளாக உள்ளது. இந்தக் காலகட்டத்தில், தி.மு.க., - காங்கிரஸ் உறவு நன்றாகவே இருந்துள்ளது. தி.மு.க., உடன் மனக்கசப்பு இருந்தால் கூட காங்கிரஸ் வெளிப்படையாகக் கூறவில்லை. தற்போது நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்துக் கூட காங்கிரஸ் வெளியில் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும் போது, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் வருத்தம் ஏற்பட்டதாகவும், அதனால், அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதாகவும் தி.மு.க., வெளிப்படையாகக் கூறியது தவறு' என்று சோனியா கோபப்பட்டார். அதற்கு பதிலளிக்காத தி.மு.க., அமைச்சர்கள், 60 சீட்கள் தருவதில் உறுதியாக இருந்தனர். ஆனால், 63 தொகுதிகள் என்பதில் சோனியா உறுதியாக இருந்தார். கடைசியாக, முதல்வருடன் மத்திய அமைச்சர் அழகிரி பேசி, 61 தொகுதிகள் தருவதற்கு முன்வந்தார்.காங்கிரஸ் தரப்பு தனது கோரிக்கையில் உறுதியாக இருந்தது. இதையடுத்து, கூட்டணி கட்சியினருடன் தி.மு.க., தரப்பில் பேசப்பட்டது.

தி.மு.க., சார்பாக, 61 தொகுதிகள் தரவும், ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பா.ம.க., - கொங்கு, முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் போன்றவற்றில் இரண்டு கட்சிகள், தலா ஒரு தொகுதிகளை விட்டுக் கொடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் முடிவில், 63 தொகுதிகளை தர தி.மு.க., சம்மதித்தது. ஆனாலும், காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்ட 48 தொகுதிகள் தவிர, மீதமுள்ள 15 தொகுதிகளை தாங்களே தேர்வு செய்வோம் என்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக இருந்தது. இதன் காரணமாக, நேற்று இரு தரப்பிலும் அவசர ஆலோசனைகள் நடந்தன. அதில், காங்கிரஸ் எட்டு தொகுதிகளை தேர்வு செய்து கொள்ளவும், மீதமுள்ள ஏழு தொகுதிகளை பொறுத்தவரை, தி.மு.க., ஒதுக்கும் தொகுதிகளை காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த உடன்பாட்டுக்கு காங்கிரஸ் சம்மதித்தது. இதையடுத்து, நேற்று மாலை உடன்பாடு ஏற்பட்டதாக குலாம்நபி ஆசாத் அறிவித்தார். காங்கிரஸ் விரும்பியபடி 63 தொகுதிகளை கடைசியாக பெற்று காங்கிரஸ் வெற்றி பெற்று விட்டது.

தலைவர் பிறந்தநாள் மற்றும் மாநில பொதுகுழு கூட்டம்


மார்ச் 8:  திருப்பூர் :  காலை  11 மணியளவில்  பெஸ்ட்  ராமசாமி அய்யா  அவர்களின்  66 வது பிறந்தநாள்  மற்றும் மாநில பொது குழு  கூட்டம்  நடைபெற்றது . கூட்டத்தில்  நமது  மாநில , மாவட்ட , ஒன்றிய , கிளை  நிர்வாகிகள்  கலந்து கொண்டனர் . கூட்டத்திற்கு  நமது கொங்குநாட்டு காவலர் திரு.பெஸ்ட் அய்யா ,  எழுச்சி  நாயகன் E .R . ஈஸ்வரன்  அண்ணன் , மக்கள் நாயகன்  பாலசுப்ரமணியம் , பேரவை  தலைவர்  தேவராஜ்  அய்யா  அவர்கள்  கலந்து கொண்டனர் . பிறகு நமது கொங்கு நாட்டு  காவலர்  பெஸ்ட் அய்யா அவர்களது 66 வது  பிறந்தநாள் கொண்டாட பட்டது .பிறகு  பொது  குழுவில்  நமது  மாநில  பொருளாளர்  பாலசுப்ரமணியம்  வரவேற்புரை  வழங்கினார் ...  பிறகு  நமது  மாநில  செயலாளர்  E .R .ஈஸ்வரன்  எழுச்சி உரை  ஆற்றினார் ... எழுச்சி  உரையில்  நமது  கூட்டணி   பற்றி  விரிவாக எடுத்துரைத்தார் ( ஒரு மாத காலம்  நானும்  நமது  மாநில பொருளாளரும்  சென்னையில்  நமது  கூட்டணி பற்றி இரு கட்சியிடமும்  பேசினோம், ஆதிமுக  நம்மை  மதிக்கவே  இல்லை , அவர்கள் நம்மிடத்திலே  பேச்சுவார்த்தை  நடத்திய  இடங்கள்  போயஸ் கார்டனில்  இருந்து 500  மீட்டர்  தள்ளிஉள்ள  ஒரு  சாக்கடை  பக்கத்தில்  ஒரு வாகனத்தில்  பேசினார்கள் , இதுவா நாகரீகம் . ஒரு மாதம்  நாம் ஆதிமுக விடையே  பேச்சுவார்த்தை  நடத்தினோம்  அனால் ஒரு தடவை  கூட அம்மாவை  சந்திக்கவே  இல்லை , கேட்டால் அம்மா பூஜையில்  இருக்கிறார்  அவரை பார்க்க முடியாது  என்று  கூறிவிட்டனர் ..ஒரு மாத காலம் அம்மா பூஜை  செய்து கொண்டே இருப்பரா ..என்னையா பதில்  இது .. பிறகு  நாம் திமுக விடத்திலே  பேச்சுவார்த்தை  நடத்தினோம் .. கலைஞர் இடத்திலே  சென்றதும்  கூட்டணி பேச்சுவார்த்தை  பற்றி  பத்திரிக்கைகளுக்கு  தெரிய வேண்டாம்  என்று  கூறினோம்  , பிறகு கலைஞர்  சரி என்று சொல்லி  இரவு  11  மணிக்கு  சந்திக்க ஏற்பாடுகள்  செய்திருந்தார் ... பிறகு  நானும்  நமது  தலைவரும் , பொருளாளரும் , பேரவை தலைவரும்  11  மணிக்கு  சென்றோம் ...கலைஞர்  இரவு 11  மணி வரைக்கும்  காத்திருந்தார் ...[கலைஞர்  எப்பொழுதும்  9  மணிக்கெல்லாம்  தூங்கிவிடுவார் ]  நம்மை  மதித்து  இரவு 11 மணி வரை காத்திருந்தார்...பிறகு  மார்ச் 1 ஆம் தேதி  வரை  ஆதிமுக  கூப்பிடவே இல்லை...பிறகு  திமுக தரப்பிலே நாளை இரவு காங்கிரஸ்     கூட்டணி  முடிவதற்காக  குலாப் நபி  வருகிறார்  அதனால்  நாளையுடன்   கூட்டணி  ஒதுக்கிடுகள்  முடிவடைந்துவிடும் ...அதனால் நாளை  இரவுக்குள்  உங்களின்  முடிவை  தெரிவிக்க  வேண்டும்  என்று கூறினார்கள் ...பிறகு  மார்ச் 2 ம் நாள்  மாநில செயற்குழு  கூட்டம்  சென்னையில் நடைபெற்றது ...கூட்டத்தில்  ஒருமித்த கருத்தோடு  திமுக வுடன்  கூட்டணி  அமைக்கலாம்  என்று முடிவானது . பிறகு  ஆதிமுக தரப்பிலே  இருந்து  தொலைபேசி  முலம்  நம்மை தொடர்பு  கொண்டு  நீங்கள் அவசரப்பட்டு  எந்த முடிவும்  எடுத்துவிடாதிர் .. மாதிமுக , கம்யூனிஸ்ட்  கூட்டணி  முடிந்த வுடன்  பார்த்து கொள்ளலாம்  என்று கூறினார்கள்  அனால் இன்று வரைக்கும்  அவர்கள்  கூட்டணியில்   சேரவில்லை ...இன்னும்  நாம்  காத்திருந்தால்  நமது  நிலைமையும்  இது தான் ...பிறகு இரவு 9 மணிக்கு அண்ணா அறிவாலயம்  சென்று  கூட்டணி ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர் ..நம்மை  பிற்படுத்த பட்டோர்  பட்டியலில்  சேர்பதாகவும், அவினாசி அத்திக்கடவு திட்டத்தை  நிறைவேற்றுவதாகவும் , சாயகழிவு பிரச்சனைக்கு  தீர்வு  காண்பதாகவும்  அவர்கள்  கூறினார்கள் )பிறகு  பெஸ்ட் அய்யா அவர்கள் பேசினார்கள் ...பிறகு  2. 30 மணிக்கு பொது குழு  முடிவடைந்தது ....கூட்டத்தின்  முடிவில்  நாம் அனைவரும்  திமுக  கூட்டணியுடன்  சேர்ந்து  அரும்பாடு பட்டு  வெற்றி பெறுவோம்  என்று  சபதம்  எடுக்கப்பட்டது.....

Monday, March 7, 2011

உழவன் விடுதலை உலகின் விடுதலை

இந்த நாட்டின் உயிர் அதன் ஊர்களில் துடித்தது. மனிதர்கள், அவர்களோடு துள்ளிவரும் ஆடு மாடுகள், நாய் பூனைகள். மரங்களும் பயிர்களும் செழித்த வயல் வெளிகள். மரவெளியின் பறவைகள். சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பாம்புகள், பூரான்கள் என எத்தனைப் பூச்சிகள், உயிர்வகைகள். கண்ணுக்கு தெரிகிற தெரியாத அத்தனை உயிர்வகைகளையும் தாயாய் அரவணைத்து மகிழ்ந்து கோடிக்கணக்கான அத்தனை உயிர் வகைகளுக்கும் உணவூட்டி மகிழ்வித்தவள் இந்த இயற்கை அன்னை.
       ஆனால் இயற்கை அன்னை இன்று ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறாள். எப்படி?
அறக்கட்டளை என்ற பெயரில் நடந்த உளவும் பசுமைப்புர‌ட்சியும்
       நாடு 1950இல் குடியரசானது. 1952இல் நாட்டில் நுழைந்தது இராக்பெல்லர் அறக்கட்டளை, போர்டு அறக்கட்டளை என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டின் இரண்டு தனியார் அமைப்புகள். இந்திய வேளாண்மை பற்றி நாடு முழுவதும் ஆழ்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டன. அமெரிக்க வேளாண் பண்ணைகள், கால்நடைப் பண்ணைகள் ஆகியவற்றைக் காண அரசியல் வாதிகள் அமெரிக்கா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. வேளாண் பட்டதாரிகள் ஆயிரக் கணக்கில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்பு படிக்கவும், உதவித் தொகையுடன்  ஏற்பாடு செய்யப்பட்டது. அமெரிக்க அறக்கட்டளைகள் வேளாண் பல்கலைக் கழகத்துடன் மிக நெருக்கமாகச் செயல்பட்டன. அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்டம் பெறத் தேர்ந்தெடுக்கபட்ட பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப் பட்டன. ஊடகங்கள் தீவிர வேளாண்மைப் பற்றியும், அமெரிக்கப் பண்ணைகளில் எந்திரமயம் மூலம் நடக்கும் அதிசயங்கள் பற்றியும் குளிரக்குளிரப் பாடின. அமெரிக்காவில் நடக்கும் அதிசயம் பற்றிக் கண்டு களித்து வந்த அரசியலர் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர். அமெரிக்க உதவியுடன் படித்து பட்டம் பெற்று வந்தவர்கள் 'அறிவியலின் அற்புத சாதனைகள்' பற்றி ஆணித்தரமாகப் பேசினார்கள். அறக் கட்டளைகள் 15 ஆண்டுகளையும் கோடிக்கணக்கான ரூபாய்களையும் கொட்டிச் செய்த ஆய்வுகள் என்ன தெரியுமா?
குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செய்து
(1) மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது 
(2) உழவர்களின்  பயிரிடும் முறையை மாற்றி இரசாயன உரங்கள், மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பது. 1965, 1966 ஆகிய ஆண்டுகளில் பருவ மழை சரியில்லை. உடனே பெரிய பிரசாரம் தொடக்கப்பட்டது. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடும் பட்டினிக் கொடுமைகளும் பெரிய அளவில் நிகழ உள்ளதாக வதந்திகள் பரப்பபட்டன. வர இருக்கும் கொடுமையான பட்டினிச் சாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திய அரசு அமெரிக்க அரசினர் 'பசுமைப் புரட்சி" என்ற பெயரில் பரிந்துரைக்கும் அதீத இரசாயன வேளாண்மையைக் கைக்கொள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்தது. அப்போதைய வேளாண் அமைச்சர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
காடுகளின் அழிவு
       காலனி ஆதிக்கத்தின் போது மலைகளில் இருந்த உயரமான மரங்கள் வெட்டப்பட்டு காப்பி, டீ, இரப்பர் மற்றும் மணப் பொருட்கள் பயிரிடப்பட்டன. இதனால் மலைப்பரப்பில் இருந்த பெரிய சூரிய அறுவடைப் பசுமை அழிந்தது. பெய்யும் மழை அளவும் குறைந்து போனது. அதீத நில அரிமானம், நிலச்சரிவு போன்றன மலைகளின் வளமையைக் குறைத்தன.
       தோட்டங்கள் போக எஞ்சியுள்ள காடுகளும் முறையாக காக்கப்படாமல் திருட்டு மர வணிகர்களால் அழிந்து வருகின்றன. சட்டவிரோதமான முறையில் காட்டு நிலங்கள் அபகரிக்கப்படுவதும் காடுகளின் பரப்பளவைக் குறைக்கின்றது.
       பல்வகையான செடிகொடிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள், சிற்றுயிர்கள், நுண்ணுயிர்கள் என விரிந்து பரவும் உயிரினங்கள் ஈடு செய்ய முடியாத செல்வங்கள். இவற்றின் அருமை புரியாதவர்களாய் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.
ஆற்றுப் படுகைகள்
       செழுமையான மழை, காடுகளின் கனத்த உலர்சருகு மற்றும் மக்குகள் வழியே வழிந்தோடும் போது மக்கு உரங்களைத் தன்னோடு எடுத்துச் செல்கின்றது. மழை நீர் ஆறுகளின் வழியே ஓடி படுகை களில் சுமந்து வந்த உரங்களைப் படியச் செய்கின்றன. படுகை கள் இவ்வாறாக ஊட்டச் சத்துக்கள் பெறுகின்றன.
       ஆனால் இன்றோ காடுகள் குறைந்து போன நிலையில் மழையும் குறைந்தது. மக்குகளும் குறைந்தன. இருக்கின்ற மக்குகளும் கட்டப்பட்டுள்ள குறுக்கணைகளில் சிறைப்பட்டு விடுகின்றன.
மானாவாரி நிலங்களை ஒதுக்கிய பசுமைப்புரட்சி
       15 ஆண்டுகளாக இந்தியாவை ஆய்வு செய்த அமெரிக்க அறக்கட்டளைகள்
       1967இல் 'பசுமைப் புரட்சி பற்றிய அறிவிப்புடன் வளமிக்க, நிறையத் தண்ணீர் வசதியுள்ள நதிப் படுகைகளில் புதிய குட்டை இரக நெல், கோதுமைப் பயிர்களைப் பயிரிடத்  தொடங்கி வங்கிக் கடன், கொள்முதல் நிலையங்கள் என அரசின் கவனம் இரண்டு பயிர் வகைகளைத் தாங்கிப் பிடித்தன. ஆனால் நாட்டின் 75 விழுக்காடு மானாவாரி நிலங்கள் பசுமைப் புரட்சியின் வளையத்திற்கும் கொண்டு வரப்படவில்லை. மானாவாரிப் பயிர்களுக்குக் கொள்முதல் நிலையங்களும் இல்லை. புறக்கணிக்கப்பட்ட இந்தப் பகுதியில் விளையும் சிறுதானியங்கள் என அழைக்கப்பட்ட புன்செய் தவசங்கள்தான் மிகுந்த சத்துகள் கொண்டது. நாட்டின் அனைத்து மக்களின் உணவுக்கு உத்திரவாதம் அளிக்கக் கூடியது. மழைநீரை முறையாகச் சேமிக்கத் தமிழ் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரி குளங்களை நன்கு பராமரித்து உழவர்களுக்கான ஏந்து திட்டங்களை  நடத்த அரசு தவறியது.
அறிவியல் சாதனை என்ற பெயரில் வணிகச் சூது
       வேளாண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பட்டறிவு கொண்ட சமுதாயத் தின் நடைமுறைகள் பத்தாம்பசலித்தன மானவை என்று மக்களை நம்ப வைத்துப் பரந்த நாட்டின் உழவுத் தொழிலின் இடுபொருட் சந்தையைப் பன்னாட் டுக் குழுமங்களின் கட்டுப்பாட்டிற்குள்  கொண்டுவந்தது பசுமைப் புரட்சி. உரம், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், விதைகள், பெட்ரோலிய எண்ணெய், நிலக்கரி, ஆழ்குழாய்க் கிணறுகள், நீர்மூழ்கி மின் இறைவைகள், நெகிழிக் குழாய்கள், சொட்டு நீர்ப் பாசனக் கருவிகள், உழுபடை எந்திரங்கள், கதிரடிக்கும் எந்திரங்கள், கதிர் அறுக்கும் எந்திரங்கள், நடவு எந்திரங்கள் போன்ற வணிகப் பெருக்கத்திற்கு வழிகோலிய பசுமைப் புரட்சியின் அடிப்படைகள் 'வேளாண் அறிவியலுக்கு" அறவே விரோதமானவை. இந்த வணிகச் சூதிற்குத் துணைநின்ற அரசியலர், வேளாண் பல்கலைக்கழகங்கள், வேளாண் பட்டதாரிகள் இந்த நாட்டிற்கும் உழவர்களுக்கும் செய்த துரோகம் கண்டிக்கத் தக்கது.
வேதியல் உரங்களின் கேடு
       மண் என்பது பயிர்களின் வேர்த் தொகுதியைத் தாங்கி நிற்கும்  இடம் மட்டுமே என்றும் பயிர்களுக்கான ஊட்டங்கள் தாங்கள் பரிந்துரைக்கும் வேதியல் பொருட்களில்தான் உள்ளதாகவும் பசுமை வணிகத்திற்கு விலைபோனவர்கள் கூறுவது அறவே அறிவியலுக்கு முரணான பொய்.
       கோடானுகோடி உயிர்களின் தாய் மண். போட்டியும் ஒத்துழைப்புமாகச் செழிக்கும் இந்த உயிர்கள் ஒரு சங்கிலி போல. தனித்தன்மை கொண்ட இந்த உயிர்கள் நடத்தும் கூட்டுவாழ்வில்தான், உயிர்ப் பன்முகத் தன்மையில்தான் உயிர்களின் இருப்பும் நீட்டிப்பும் உள்ளன. இயற்கை அன்னை  பெரிய உணவுக்கிடங்குகள் கட்டி, எல்லா உயிர்களுக்கும் தினந்தோறும் உணவு பங்கீடு செய்வதில்லை.
       ஒன்றன் கழிவு மற்ற உயிரின் உணவு என்பதுதான் இயற்கையன்னையின் உணவு நியதி. உயிர்ப் பன்முகத் தன்மைதான் உணவுப் பங்கீட்டின் விதி. இந்த இரண்டு அடிப்படை உண்மைகளையும் புறக்கணித்து இயற்கையை நாசப்படுத்தியது பசுமைப் புரட்சி.
       இட்ட வேதியல் உரங்களில் பெரும்பகுதி பயிரால் உறிஞ்சப்படுவதில்லை. அது நிலத்தடி  நீரிலும் வடிகால் நீரிலும் கரைந்து பரவி சூழற் கேடாக மாறுவதோடு நிலத்தின் சிற்றுயிர் நுண்ணுயிர்களையும் அழிக்கின்றது. இயற்கையின் இருப்பாக இருக்கும் சங்கிலி வளையக் கண்ணிகளை உடைப்பது பல தொடர்விளைவுகளை உண்டாக்க வல்லது. இது பற்றிய உண்மைகளை அறவே மறைத்தனர் பசுமைப் புரட்சியின் காவலர்கள்.
பூச்சிக் கொல்லி - களைக் கொல்லிகளின் கெடு
 பூச்சி - களைக்கொல்லிகள் கடுமையான நச்சுப் பொருட்கள். பூச்சிகளை மட்டுமல்ல அனைத்து உயிர்களையும் கொல்லும் அபாயமான வேதியல் பொருட்கள். இயற்கையில் வாழும் எந்த உயிரினமும் இதனை உள்வாங்கிச் செரிக்க முடியாது. நல்ல பாம்பின் விடத்தைக் கூட நம்மால் செரித்து விட முடியும். மேலும் இயற்கையாலும் சிதைக்கவோ மக்க வைக்கவோ முடியாத இந்த நச்சுகள், நீர், மண் வழியாகப் பரவி, உண்ணும் உணவில் உறிஞ்சப்பட்டு மனித உடலின் கொழுப்பில் கரைந்து செமிக்கப்பட்டு மனிதர்களுக்குக் கடும் நோய்களை உருவாக்குகின்றன. இன்றைய நிலையில் பூச்சிக் கொல்லிகளால் ஏற்படும் உயிர் இழப்பும் பொருள் இழப்பும் பன்மடங்காகப் பெருகியுள்ளன. பன்னாட்டுக் குழுமங்கள் ஆய்வுக் கருவிகள், மருந்துகளையும் விற்க மேலும் ஒரு புலம் உருவாகியுள்ளது.
மண், நீர், சூழ‌ல், உண்ணும் உணவு நஞ்சானது.
       தன்னுள் கலந்த அன்னியப் பொருட்களைச் செரித்து உள்வாங்கும் மண்ணும் நீரும் அளவு கடந்து கொட்டப்படும் செரிக்க முடியாத நச்சுகள், நெகிழிகள் போன்றவற்றால் மூச்சுத் திணறுகின்றன. காற்றில் விடப்படும் அதீதப் புகைகள் வளிமண்டலத்தையே மாசுபடுத்தி சூழல் விபத்தாக உருவெடுக்கின்றன. கொடும் சூறாவளிகள், பெருவெள்ளங்கள், புயல்கள், உயரும் கடல்மட்டம் என மனித குலத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் நிலையில் உள்ளன. மாசுபட்ட காற்று, நீர், மண் ஆகியன உண்ணும் உணவை நஞ்சாக்குகின்றன. இவை போதா என்று உலகை ஆதிக்கம் செய்யச் சதி செய்யும் மான்சாண்டோ குழுமம் பரப்பும் மரபீனி மாற்று விதைகளால் மனித உடலில் ஏற்படும் ஆபத்துக்கள் இன்னும் முழுமையாக அறியப்படாத ஒரு பயங்கரமாக இருந்து வருகிறது.
       இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மிக்க ஆர்வத்துடன் இந்திய அரசுக்கு உதவிய அமெரிக்கக் கட்டளைகள் மனித அலைகளை மட்டுப்படுத்தத் திட்டங்களைச் செயல்படுத்தின. மறைமுகமாகக் கொல்லும் பூச்சிக் கொல்லிகளும் மக்கள்தொகையைச் சத்தமின்றி குறைக்கின்றன.
பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், மனிதர்களைத் தாக்கும் நோய்கள்
       பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகள் புழு பூச்சிகளை உண்ணும் பூச்சிகளையும் கொல்கின்றன. பூச்சிகளைத் தின்று  வாழும் பறவைகளையும் பாதிக்கின்றன. பயிர்களைத் தின்னும் பூச்சிகள், அவற்றை உண்ணும் மனிதனுக்கு நன்மை செய்யும் பூச்சிகள், மக்க வைக்கும் உயிரிகள், பறவைகள் ஆகிய பல்வகை உயிரினங்களுக்கு இடையே உள்ள இயற்கைச் சங்கிலி உறவை அழிக்கின்றன. சமநிலை அற்றுப்போன இயற்கையில் பூச்சிகள் கடுமையாக வளர்வதைத்தான் காண்கிறோம். பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு பூச்சிகளின் வளர்ச்சியில்தான் முடிந்துள்ளது. இத்தகைய ஒரு பாதகத்தைச் செய்தவர்கள்  நுண்ணறிவும் தொலைநோக்கும் சிறிதும் இல்லாத மனிதநேயமே அற்ற வணிகர்கள் என்பதே தெளிவாகிறது.
வேளாண்மைக்கான உள்கட்டமைப்புகள் பாரம்பரிய முறையில்...
       கரிகாலன் கட்டிய கல்லணையும் பாசன வாய்க்கால்களும் இராசேந்திர சோழன் அமைத்த வீராணம் ஏரியும் ஆயிரம் ஆண்டுகட்குப் பின்னரும் உயிர்காக்கும் அமைப்புகளாக நிற்கின்றன. தமிழ் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகள், குளங்களை விட கடந்த ஆயிரம் வருடங்களில் செய்யப்பட்ட பெரிய முன்னேற்றங்கள் இல்லை என்பது வருந்தத்தக்கது.
       மன்னர் கால நீராதாரங்களின் மீது நடத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இக்கால மன்னர்கள், மீட்க வேண்டும். பொதுப் பயன்பாட்டுக் குளங்கள் மழை நீர் சேகரிப்பு, நீர் சிக்கனம், இயற்கைமுறையில் நீர்த் தூய்மை, மறு சுழற்சி ஆகியவைகளுக்கு நம் முன்னோர்களின் நிலைத்த, நீடித்த வாழ்முறைக்குச் சான்றுகள். மின்சக்தியை மையப்படுத்தும் நீர்ப் பயன்பாட்டு முறைகள் நீடிக்க மாட்டா. இப்பொழுதே நம் மின் நிலையங்களுக்கு வேண்டிய நிலக்கரியை ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
       ஆப்பிரிக்க நிலக்கரியும் வறண்டு போனால் என்ன செய்வது? ஆட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் ?
வேளாண்மைக்கான   உள்கட்டமைப்புகள் பசுமைப் புரட்சிக்  காலத்தில்      
ஆறுகளைச் சிறைப் பிடிக்கும் அவலக் காலம் இது. அவற்றை மீட்க அனைத்து வகையிலும் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு வடிநிலத்திலும் மழைநீர் வெளியேறி ஓடுவதைத் தடுத்து ஏரி, குளங்களில் தேக்கவும், நிலத்தடி நீராகச் சேமிக்கவும் தேவையான கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும். குறைந்து கொண்டே போகும் நிலத்தடி நீர்மட்டமும், நிலத்தடி நீரில் அதிகரிக்கும் அதீத உப்பும் மனித உடல்நலனையும், வேளாண்மையையும் அச்சுறுத்தும் பெரிய சக்திகள். இதனை வெல்ல மழைநீர் சேகரிப்பும் நிலத்தடி நீராக உட்புகுத்தலும் இன்றியமையாதவை.
       ஏற்கெனவே கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள், போத்தல் நீர் வணிகம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் இந்தியாவை பெருஞ்சந்தையாக்கக் துடிக்கின்றன.
உயர்ந்துபோன இடுபொருட்களுகளும் சக்தி உள்ளீடுகளும்.
       பசுமைப் புரட்சி கால்நடைகளின் எண்ணிக்கையைக் குறைத்துப் பாரம்பரிய வேளாணமையைப் பின்னுக்குத் தள்ளி விட்டது. உரம், பூச்சி, களைக் கொல்லி, விதைகள், பயிர் ஊக்கிகள், எந்திர உழவு, நடவு, அறுவடைச் செலவுகள் என இடுபொருட்செலவுகளை உழவனின் தலையில் சுமத்தியுள்ளது.
       உழவுத் தொழிலுக்கான பெட்ரோல், டீசல், நிலக்கரி, மின்சாரம் ஆகிய தேவைகள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. அரசாங்கம் உரக்கம்பெனிகளுக்கு தரவேண்டிய மானியம, சொட்டுநீர்கருவிகள் போன்ற இதற மானியச் செலவுகள், மின்சார நிலையங்கள் அமைக்கத் தேவையான முதலீடுகள், உள்கட்டுமானங்கள் என தேவைகள் விரிவாக்கப்படுகின்றன. பல்வேறு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஆடுகளம் அமைப்பது அரசின் வேலையாகப் போய் விட்டது. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய உழவன் செலவிடும் தொகை, அரசு செலவினங்களின் தொகை ஆகியவைகளை தொகுத்து வெளியிட அரசு முன்வருமா? உழவனின் உற்பத்திக்குக் கிடைக்கும் விலை நியாயமில்லை என்பதை அரசு உணருமா?
       இடுபொருட்களில் உழவர்களை உறிஞ்சும் பன்னாட்டுக் குழுமங்கள், உழவனின் விளை பொருட்களுக்குரிய விலையை எப்போதும் குறைத்தே வைத்துள்ளன.
       பன்னாட்டுக் குழுமங்களின் வேட்டைக் காடு
       உழவர்கள்தாம் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளால் பெருத்த நெருக் கடிகளுக்கு ஆளாகியுள்ளனர். அறுவடைக்குப் பின் பதப்படுத்தல், உணவுப்பொருட்களின் கொள்முதல், சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகளில் வால்மார்ட், ஏடிஎம் போன்ற உலகமகா நிறுவனங்கள் குதிக்கின்றன. விதைத் துறையில் இந்திய உழவுத் தொழிலையே தன் காலடியில் கொண்டுவர மான்சாண்டோ நாட்டைச் சுற்றிவளைக்கின்றது. சக்திகள் துறையில் பல்வேறு நிறுவனங்கள். உழவனின் நிலங்களைக் கையகப்படுத்தச் செயல்படும் நிலத் திமிங்கலங்கள். மொத்தத்தில் இந்தியா சூழப்பட்ட ஒரு வேட்டைக்களமாகியுள்ளது.
அழியும் வேளாண்மை, புலம்பெயரும் உழ‌வர்கள், குறையும் உற்பத்தி
       உழவு சுமக்க முடியாத ஒரு தொழிலாகி விட்டது. வளமான நிலங்களில் கூட உழவு கட்டுப்படியான ஒரு தொழிலாக இல்லை. உழவுத் தொழிலாளிகள் தொடர்ந்து சிறு பெரு நகரங்களுக்கும், திருப்பூர், கேரளா என்றும் சென்ற வண்ணம் உள்ளனர். ஊரில் எஞ்சும் தொழிலாளர்களை 100 நாட்கள் வேலைத் திட்டம் என்ற பெயரில் அரசாங்கமே முன்னின்று உழவுத் தொழில் சாராத வேலைகளுக்கு திருப்புகின்றது. முக்கியமாக உழவுப் பணிகள் மும்முரமாக நடக்கும் நேரத்தில் தொழிலாளர்களை மடைமாற்றுவது உழவுத் தொழிலைக் கொல்லும் ஓர் முயற்சியாக உள்ளது. 100 நாட்கள் வேலையை அரசு கொண்டுவந்த பிறகு வேலைத்திறன், ஒருவர் செய்யக் கூடிய வேலையின் அளவு பற்றிய கருத்துக்கள் உழவனுக்கு எதிராக உருவெடுக் கின்றன. ஆனால் கூலி மட்டும் உயர்ந்து கொண்டே போகின்றது. உழவடைச் செலவுகளைச் சமாளிக்க முடியாத உழவன் செய்யும் உழவு வேலைகளைச் சுருக்கிக் கொள்கின்றான். நிலங்களைத் தரிசு போடுவது, நிரந்தரப் பயிர்களாக மாற்றுவது, ஆடு மாடுகள் வளர்ப்பதைக் குறைத்துக் கொள்வது, கட்டுமனைகளாக மாற்றி விற்று விடுவது, குத்தகைக்கு விட்டுவிட்டு நகர்நோக்கிச் செல்வது போன்ற போக்குகள் உழவர்கள் மத்தியில் வளர்கின்றன.
       இவையனைத்தும் வேளாண் பொருள் உற்பத்தியின் அளவு, பன்முகத்தன்மை ஆகியவற்றைக் கடுமையாகப் பாதிக்கின்றன. நாடு உணவு நெருக்கடியை நோக்கித் தள்ளப்படுகின்றது. ஆள்வோர் உழவர்களின் குரலைப் பொருட்படுத்துவதாக இல்லை.
பசுமைப் புரட்சியின் தோல்வியும் அமெரிக்காவின் புதிய‌ பசப்பல்களும்
       அமெரிக்காவோடு ஊடாடி மன்மோகன் சிங் பேசும் இரண்டாவது பசுமைப் புரட்சி, அதிபயங்கரமான ஒன்று. நாட்டின் எஞ்சியிருக்கும் இயற்கை வளங்களை அழித்து நூறு கோடி மக்களைக் கொத்தடிமைகளாகப் பன்னாட்டுக் குழுமங்களின் தொழுவத்தில் கட்டும் பெரும் சூது.
       இயற்கை வேளாண்மை மூலம் இயற்கையின் சக்திகளை மீட்டெடுப்பதும், மழைநீர் சேகரிப்பும்தான் சரியான மாற்றுத் திட்டம். மரங்களையும் கால்நடைகளையும் பெருக்குவதே தேசிய பெருங்கடமை என நாம் கொள்ள வேண்டும்.
மரபீனி மாற்று  மான்சாண்டோவின் கொடுஞ்சூது
       மானசாண்டோவைப் புறக்கணிப்போம். நாட்டின் விடுதலையைக் காப்போம்.
       சிதைந்து போன உட்கட்டமைப் புகளைப் புனரமைப்போம். மேன்மைப் படுத்துவோம்.
       மண், நீர், காற்று, சூழல் தூய்மை காப்போம்.
       சுயசார்பு ஊரகங்களைக் கட்டுவோம். ஊரக மக்களின் தேவைகளை அவர்களே உற்பத்தி செய்ய வழிகாண்போம்.
       தமிழக உழவர்களின் சாதனை உலகையே குலுக்கட்டும். உழவன் விடுதலை உலகின் விடுதலை.

தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து


வரலாறு நெடுகிலும் நம் தமிழ்த் தாய் ஆபத்துகள் சூழவே வாழ்ந்து வருகிறாள். ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தமிழுக்கு ஒரு புதிய ஆபத்து வந்துள்ளது. பெருந்திரளான தமிழ் மக்கள் இந்த ஆபத்தை உணரவில்லை என்பதால் இந்தப் புதிய ஆபத்து இன்னுங் கூட பெரிய ஆபத்தாகி விட்டது.
சமற்கிருத, ஆங்கில, இந்தித் திணிப்புகளாலும், கலப்புகளாலும் தொடர்ந்து அடுத்தடுத்து வந்துள்ள தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துச் சில பல இழப்புகளுக்கும், சிதைப்புகளுக்கும் உள்ளான போதிலும் சீரிளமைத் திறங்குன்றாச் சிறப்பை அறவே இழந்து விடவில்லை நம் அன்னை.
இயற்கை மொழிகளின் மூல வடிவம் ஒலியே. வளர வளர வரப்பெற்று மொழிக்கு முழுமை தருவது வரி வடிவமாகும். தமிழுக்கே உரித்தான ஒலி வடிவத்தையும், வரி வடிவத்தையும் 'கிரந்த எழுத்துகள்' எனப்படுகிறவற்றைக் கொண்டு சிதைக்கும் முயற்சிகள் சில நூற்றாண்டுகள் முன்பே தொடங்கி விட்டன. இந்த முயற்சிகள் கணி உலகிலும் (கணிப்பொறி, கணினி, கணி) பரவி விட்டதுதான் இப்போது புதிய செய்தி. இச்செய்தியைப் புரிந்து கொள்வதற்குச் சில இலக்கண வரையறைகளை (விளக்கங்களை) அறிந்து கொள்ள வேண்டும்.
1) கிரந்த எழுத்துகள் : நமக்கு நன்கு தெரிந்த சில கிரந்த எழுத்துகள் ஜ, ஸ, ஷ, ஹ ஆகியவை. ஸ்ரீ,  ஆகியவை நாமறிந்த கிரந்தக் கூட்டெழுத்துகள். ஆனால், இவை மட்டுமல்ல, கிரந்தத்தில் 16 உயிர் எழுத்துகளும் 34 மெய் எழுத்துகளும் உள்ளன.
கிரந்தம் ஒரு மொழியன்று. எழுத்து வடிவம் இல்லாத சமற்கிருத மொழியை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வரி வடிவமே கிரந்தம் . இதன் பிறப்பிடம் வடநாடன்று, தென்னாடே.
சமற்கிருதத்தின் இயல்பான வரி வடிவம் தேவநாகரி எழுத்துமுறையே ஆகும். இந்தி, குசராத்தி, மராத்தி, வங்கம் போன்ற பல வட இந்திய மொழிகளுக்கும் தேவநாகரியே சிற்சில மாறுபாடுகளுடன் எழுத்துமுறையாகப் பயன்படுகிறது - உரோமானிய எழுத்து முறையே ஆங்கிலம், பிரெஞ்சு, இசுப்பானியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய மொழிகளுக்கும் பொதுவான வரி வடிவமாகப் பயன்படுவது போல.
ஆனால் தமிழுக்கென்று தனி எழுத்துமுறை உள்ளது. திராவிட மொழிக் குடும்பம் என்று தவறாகப் பெயரிட்டழைக்கப்படும் தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி எழுத்து முறைகள் உள்ளன.
மலையாள மொழியானது வடமொழிக் கலப்புக்கு முழுமையாக இடமளிக்கும் பொருட்டு ஜ, ஸ, ஷ போன்ற கிரந்த எழுத்துகளைத் தன் நெடுங்கணக்கிலேயே இணைத்துக் கொண்டு விட்டது. தெலுங்கு, கன்னடம் பற்றி நமக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால் மொழிக் கலப்பில் நாட்டம் கொண்டவர்கள் அல்லது அது பற்றிக் கவலைப்படாதவர்களான பல தமிழர்கள் கிரந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளோடு கலந்து எழுதும் வழக்கம் இருந்தாலும், தமிழ் நெடுங்கணக்கில கிரந்தத்தை நாம் சேர்த்துக் கொள்ளவில்லை. கிரந்தம் இருந்தாலும் கிரந்தமாகவே இருக்கிறது, கலந்தாலும் கிரந்தரமாகவே கலக்கிறது. இப்போது கணியுலக அளவிலாவது கிரந்தத்தைத் தமிழ்க் கணக்கிலும், தமிழைக் கிரந்தக் கணக்கிலும் சேர்;க்க ஒரு முயற்சி நடைபெறுகிறது. இதையே தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து என்கிறோம். எப்படி? இந்தக் கேள்விக்குரிய விடையை விளங்;கிக் கொள்ள இன்னுமொரு சொல்லுக்கு விளக்கம் தேவைப்படுகிறது. அதுவே ஒருங்குறி.
2) ஒருங்குறி: கணி(னி) வழியாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தோதாக ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பொதுவான எழுத்துமுறை தேவைப்படுகிறது. இவ்வாறான பல எழுத்துமுறைகளை உள்ளடக்கிய பன்மொழி எழுத்துமுறைதான் ஒருங்குறி (ரniஉழனந) எனப்படுகிறது. உலக மொழிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு தனிக் குறியீடு ஒதுக்கப்படுகிறது. இக்குறியீடு எல்லா வகைக் கணிகளிலும் ஒன்றாகவே இருக்கும்.
ஒருங்குறியில் கொரிய மொழிக்கு 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளும் சீனம் உள்ளிட்ட மொழிக் குடும்பத்துக்கு 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளில் எழுத்துகள் மிகுதியாய் இருப்பதே காரணம். தமிழ், மலையாளம், கன்னடம், ஒரியம், தேவநாகரி போன்ற எழுத்துமுறைகள் ஒவ்வொன்றுக்கும் 128 குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொழியல்லாத எழுத்து முறையாகிய கிரந்தத்துக்கு இதுவரை தனியிடம் தரப்படவில்லை.
ஒருங்குறி தொடர்பான பணிகளைச் செய்வது ஒருங்குறிச்; சேர்த்தியம் (வாந ருniஉழனந ஊழளெழசவரைஅ) என்னும் பன்னாட்டு அமைப்பு. அரசுகள், (மைக்ரோசாப்டு போன்ற) கணிக் குழுமங்கள், பிற நிறுவனங்கள், தனியாட்கள் இதில் உறுப்பு வகிக்கலாம். தமிழக அரசு முன்பு இதில் உறுப்பினராயிருந்து, பிறகு உறுப்புக் கட்டணம் செலுத்தத் தவறியதால் உறுப்பாண்மையை இழந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்திய அரசு தொடர்ந்து இதில் உறுப்பாய் இருந்து வருகிறது.
ஒருங்குறிக் கட்டமைப்பு என்பது பல்வேறு தளங்களால் ஆனது: (1) அடிப்படைப் பன்மொழித் தளத்தில் (Basic Multilingual Plane- BMP) தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. உலக அளவில் இப்போது வழக்கில் இருக்கும் எல்லா மொழிகளும் அவற்றுக்குரிய எழுபதுக்கு மேற்பட்ட எழுத்துமுறைகளும் இத்தளத்தில்தான் உள்ளன. இவை தவிர அதிகமாகப் பயன்படும் எண்-குறிகள், கணிதக் குறிகள், சின்னங்கள், மீக்குறிகள் போன்றவையும் இதில் இடம் பெறுகின்றன. (2) துணைப் பன்மொழித் தளத்தில் (Supplementary Multingual Plane - SMP) வழக்கொழிந்த மொழிகளின் எழுத்துக் குறிகளும், அரிதாகப் பயன்படும் எழுத்துக் குறிகளும், இசைக் குறிகளும், சிற்சில சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. இது வரலாற்று நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தளமாகும். துணைப் பன்மொழித் தளத்தோடு கூட துணைப் படமொழித் தளமும் (Supplementary Ideographic Plane) உள்ளது. தளங்கள் 3 முதல் 13 வரையிலானவை எதிர்காலப் பயன் பாட்டுக்குரியவை. தளம் 14 சிறப்புக் குறிகளுக்கானது. 15,16 ஆகிய தளங்கள் தனியார் பயன்பாட்டுக்குரியவை.   
எல்லாத் தளங்களிலும் சேர்;த்து மொத்தம் 11 இலக்கத்துக்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் சொந்தப் பயன்பாட்டுக்குரியவை 1,13,000 ஆகும்.
       ஒருங்குறிச் சேர்த்தியம் 1991ஆம் ஆண்டு தன் பணிகளைத் தொடங்கிய போதிலும், ஒருங்குறியைப் பயன்படுத்துவது 2000ஆம் ஆண்டுதான் தொடங்கியது.
       ஒருங்குறி தோன்றிய போதே ஜ, ஸ, ஷ, ஹ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்து வரிசையில் சேர்க்கப்பட்டு விட்டன. ஒருங்குறிச் சேர்த்தியம் யாரைக் கேட்டுக்கொண்டு இப்படிச் செய்தது என்று தெரியவில்லை. இந்த கிரந்த எழுத்துகளைத் தமிழர்கள் பரவலாகப் புழங்குவது தெரிந்ததே, பள்ளிக் குழந்தைகளுக்கான பாட நூல்களிலும் இந்த எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இந்த எழுத்துகளை ஏற்றுக் கொள்ளத் தமிழக அரசின் அரசாணையே உள்ளதாம்.
       கிரந்தம் கலந்த தமிழ்; எழுத்துமுறை சமற்கிருத, ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கலந்து எழுதுவதற்கு (எ-டு: ஜெயம், ஜூனியர்) உதவியாகவும் ஊக்கமாகவும் அமைந்து விட்டது. கிரந்தம் தேவைப்படாத பெயர்களைக் கூட கிரந்தம் கலந்து எழுதுவதைப் பார்க்கிறோம் (சஞ்சய் இவ்விதம் ‘சஞ்ஜய்' ஆகி விடுகிறார். சங்கர் 'ஷங்கர்' ஆகிறார்). இதை விடவும் பெருங்கொடுமை தூய தமிழ்ச் சொற்களை எழுதுவதற்கே கூட கிரந்தத்தைப் பயன்படுத்துவதாகும். மதுக்கடை ஒன்றின் பெயர்ப் பலகை 'குறிஞ்ஜி வொய்;ன்ஸ்' பருக அழைக்கிறது.
       குறிஞ்சி கிரந்த போதையால் 'குறிஞ்ஜி' ஆகித் தள்ளாடக் காண்கின்றோம். மஞ்சள் வணிகத்தில் மார்வாடிகள் - குசராத்தி சேட்டுகள் நுழைந்திருப்பது போல் மஞ்சளில் கிரந்தம் நுழைந்து 'மஞ்ஜள்' ஆனாலும் அஞ்சற்க ('அஞ்ஜற்க'வோ)! கிரந்தமும் ஆங்கிலமும் சேர்ந்து தமிழை விலக்கி வைப்பதற்குச் சான்றாக, காவல்காரன் படத்துக்கு இரசிகர்கள் வைத்துள்ள விளம்பரத் தட்டி 'இளைய தளபதி விஜய்' என்று கொண்டாடுகிறது.
       ஒருங்குறியில் நாமறிந்த ஜ, ஸ, ஷ, ஹ ஆகியவற்றோடு ஐந்தாவதாக நாம் இது வரை அறியாத ஒரு கிரந்த எழுத்தும் சேர்ந்து விட்டது. இந்த ஐந்தும் தமிழ் எழுத்துகளாகவே குறியிடப்பட்டிருப்பது பெருங்கொடுமை! இதற்கான முன்மொழிவை 'உத்தமம்' என்ற அமைப்பு அனுப்பியதாம்! அமெரிக்காவில் வாழும் தமிழர் - கணிஞர் நா. கணேசன் இதற்குத் தூண்டுதலாம்! இந்தக் கொடுமையை ஒருங்குறியைப் பாரத்துத்தான் தமிழறிஞர்களே தெரிந்து கொண்டார்களாம்! ஆனால் இணையத்தில் இந்த எழுத்தை இருவர் மட்டுமே பயன்படுத்தி வருவது ஆறுதலான செய்தி. இந்த இருவரில் ஒருவர் நா. கணேசன்!
       உத்தமமும் நா. கணேசனும் ஒருங்குறிச் சேர்த்தியத்தில் உறுப்பினர்கள். இன்னோர் உறுப்பினர் தமிழ்நாட்டில் இருக்கும் சிறிரமணசர்மா. இவர் கொடுத்த முன்மொழிவு: 26 கிரந்தக் குறிகளை ஒருங்குறிக்குள் கொண்டு வந்து, அதனைத் 'தமிழ் நீட்சி' என அழைப்பதாகும். தமிழை இப்படி நீட்டினால்தான் சமற்கிருதம்;, சௌராட்டிரம் ஆகிய மொழிகளைத் தமிழ் வரி வடிவத்தில் எழுத முடியும் என்பது ரமணசர்மாவின் வாதம்.
       சிறிரமணசர்மா 2010 சூலை 10ஆம் நாள் 'தமிழ் நீட்சி' முன்மொழிவைத் தந்தார். அது குறித்துக் கருத்துத் தெரிவிக்கக் கடைசி நாள் 25.10.2010. 'தமிழ் நீட்சி' முன்மொழிவையும் அதனால் எழக் கூடிய தீமைகளையும் கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வக்குமாரும் மற்றச் சிலரும் உலகறியச் செய்தார்கள். அதற்குள் அக்டோபர் திங்கள் பிற்பகுதியாகி விட்டது. பதறியெழுந்த தமிழறிஞர்கள் அவசரமாகத் தங்கள் மறுப்புக் கருத்துகளை ஒருங்குறிச் சேர்த்தியத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஒருங்குறி அறிஞர்களான மலேசியாவைச் சேர்ந்த திரு முத்து நெடுமாறனும், தமிழகத்தைச் சேர்ந்த திரு மணி மு. மணிவண்ணனும் நுணுக்கமான முறையில் ரமணசர்மாவின் முன்மொழிவை நொறுக்கி வி;ட்டார்கள்.
       எப்படியோ ஒரு வழியாக ஒருங்குறிச் சேர்த்தியம் ரமணசர்மாவின் 'தமிழ் நீட்சி'யை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரேயடியாக மறுத்து விட்டதா என்று இனிதான் தெரிய வேண்டும்.
       சிறிரமணசர்மாவின் மற்றொரு முன்மொழிவு 68 கிரந்தக் குறிகளுக்கும் ஒருங்குறியில் தனி ஒதுக்கீடு கேட்பதாகும். இது தமிழுக்குள் கிரந்தத்தையோ கிரந்தத்துக்குள் தமிழையோ நுழைப்பதாக இல்லாத வரை நம் கவலைக்குரியதன்று. இந்த முன்மொழிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
       இவ்வாறு தள்ளி வைக்கப்பட்டதற்குக் காரணம் நா. கணேசனின் மற்றுமொரு முன்மொழிவாகும். 68 கிரந்தக் குறிகளோடு சேர்த்;து எ, ஒ, ழ, ற, ன ஆகிய ஐந்தையும், எகர உயிர்மெய்க் குறி (n), ஒகர உயிர்மெய்க் குறி (n - h) ஆகிய இரண்டையும் சேர்;த்து ஏழு தமிழ்க் குறிகளைக் கிரந்தத்துக்குள் சேர்த்து, 75 குறிகளைக் கொண்ட தமிழ் - கிரந்தக் கலவைக் குறியீட்டை உருவாக்குவதே அந்த முன்மொழிவு. ரமணசர்மா தனது தனிக் கிரந்த ஒதுக்கீட்டை துணைப் பன்மொழித் தளத்தில் கேட்டார் என்றால், இளங்கோவனோ அடிப்படைப் பன்மொழித் தளத்தில் தனது கலவைக் குறியீட்டுக்கு இடம் கேட்டார்.
       கிரந்த சேவையில் ரமணசர்மாவுக்கும் நா. கணேசனுக்கும் நிகழ்ந்த போட்டா போட்டியால் முடிவெடுக்கத் திணறிய ஒருங்குறிச் சேர்த்தியம் இந்திய அரசின் உதவியை நாடியது. இந்திய அரசு தமிழக அரசையோ தமிழறிஞர்களையோ கலந்து கொள்ளாமலே தனது முன்மொழிவை அனுப்பியது. நா. கணேசன் கேட்ட 75 குறிகளுடன் வேறு சிலவற்றையும் சேர்;த்து மொத்தம் 89 குறிகள் கொண்ட தமிழ் கலந்த கிரந்தக் குறியீடு வேண்டும் என்பது தில்லியின் முன்மொழிவு. இந்தக் கலப்படக் குறியீட்டை இந்திய மொழிகள் அனைத்துக்குமான பொது எழுத்து முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பது அதன் ஆசைக் கனவு.
       இந்த முன்மொழிவு பற்றி முடிவெடுக்க 2010 நவம்பர் மாதம் ஒருங்குறிச் சேர்த்தியம் காத்திருந்த நிலையில்தான் தமிழறிஞர்களும் தமிழுணர்வாளர்களும் சீறிக் கிளம்பினர். முனைவர் இராம,கி., பேராசிரியர் மறைமலை, இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோர் விடுதலை ஆசிரியர் கி. வீரமணியைச் சந்தித்து சிக்கலைச் எடுத்துரைக்க, அவர் தமிழக அரசை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தார். தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்தி முடிவைத் தள்ளிவைக்கச் செய்துள்ளது. 2011 பிப்ரவரி 7 வரை தமிழ்க் கட்சிக்கு அவகாசம் கிடைத்துள்ளது. தமிழக அரசு ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது. வேறு எதற்கும் இல்லா விட்டாலும் சிக்கலைக் கிடப்பிலிட விசாரணைக்குழு பயன்படும் என்பது பட்டறிவு.
       இம்முறை தமிழ் அறிஞர்கள், உணர்வாளர்களும், தமிழ் அமைப்புகளும் விழித்துக் கொண்டு விறுவிறுப்பாகச் செயல்படுவது நல்ல செய்தி. தாளாண்மை உழவர் இயக்கம் 2011 சனவரி 9ஆம் நாள் தஞ்சையில் கருத்தரங்கமும் பொதுக்கூட்டமும் நடத்தித் தமிழ் எழுத்துச் சிதைப்புக்கு எதிர்ப்பை ஒருமுகப்படுத்தியுள்ளது. 'ஒருங்குறித் தமிழ் - மெய்யும் மீட்பும்' என்ற அறிவ+ட்டும் கட்டுரைத் தொகுப்பையும் அது வெளியிட்டுள்ளது. தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
       ஊடகங்களில் மக்கள் தொலைக்காட்சி சங்கப் பலகையில் ஒருங்குறி தொடர்பாக இலக்குவனார் திருவள்ளுவன், நாக. இளங்கோவன், இராம. கி. ஆகியோருடன் உரையாடல்கள் இடம்பெற்றன. நீதிமன்றத்தை அணுகும் திட்டமும் உள்ளது. பல்வேறு முனைகளிலும் தமிழ் காக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
       ஆனால் விடைகாண வேண்டிய உயிர்க் கேள்வி ஒன்று உள்ளது: தமிழுக்கு இப்படித் திடுமென ஆபத்துகள் கிளம்புவது ஏன்? ஏழுகோடித் தமிழ் மக்கள் பேசும் மொழியின் எழுத்துமுறையில் கிரந்தக் கலப்படம் செய்ய யாரோ ஒரு சர்மாவும் யாரோ ஒரு கணேசனும் முன்மொழிவதும், அதை மறுத்துத் தமிழ் அறிஞர்கள் மெனக்கெட்டு வாதிட்டுக் கொண்டிருப்பதும், அரசே இதற்கு ஒரு குழு அமைப்பதும்… இது என்ன கூத்து? ஒருங்குறியில் தமிழ் எழுத்துமுறைக்கு யார் பொறுப்பு? ஒருங்குறிச் சேர்த்தியம் என்ற பன்னாட்டு அமைப்பு தமிழ் எழுத்துமுறையில் சேர்;க்கைகள் செய்ய முன்மொழிவுகள் வந்தால் அதைத் தமிழக அரசுக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கும் செம்மொழி ஆய்வு மையத்திற்கும் தெரிவித்துக் கருத்துக் கேட்க வேண்டாமா? இந்திய அரசும் சேர்த்தியத்தின் முன்மொழிவுக்கு விடை தருமுன் தமிழக அரசைக் கேட்கத் தேவையி;ல்லையா? தமிழின் ஒலி, வரி வடிவங்களைக் காக்கவும், மாற்றம் செய்ய வேண்டுமென்றால் உரியவாறு அதைச் செய்யவும் தமிழ்ப் புலவர் குழு, தமிழ்ப் பேரவை போன்ற நிலையான அமைப்புகள் தேவையில்லையா?
       உலகில் தமிழனைப் போலவே அவன் பேசும் மொழியும் நாதியற்றுப் போய் விட்டதே! தமிழ்க் காப்பு, தமிழ் மீட்பு என்பது மொழித் தளத்தில் மட்டும் நிறைவேறக் கூடியதன்று. தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்தை வெல்வதோடு, வருமுன் காக்கும் சிந்தனையும் நமக்குத் தேவை.

காலிங்கராயன் கால்வாய் - ஒரு பருந்துப்பார்வை


ஈரோடு மாவட்டத்தில், காலிங்கராயன் கால்வாய் அம்மாவட்டத்தின் அணிகலனாகத் திகழ்கிறது என்பது மிகையல்ல. பவானி ஆற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, காவிரியாற்றின் ஓரமாகவே, அதன் தென்கரையில் சுமார் 86.8 கிலோ மீட்டர் (55.5 மைல்கள்) கிழக்காக ஓடி ஆவுடையார் பாறை என்ற இடத்தில் நொய்யல் ஆற்றில் சங்கமமாகிறது. கால்வாயின் இரு கரைகளும், காரையால் கட்டப்பட்டு இருப்பதால், “காரைவாய்க்கால்’’ என்றும் பாம்புபோல் நெளிந்து நெளிந்து செல்வதால் “கோண வாய்க்கால்’’ என்றும் ஈரோடு மக்கள் அழைக்கின்றனர். இக்கால்வாயை காலிங்கராயன் என்பவர் வேளாண் தொழில் நுட்பத்துடன் உருவாக்கியதால், காலிங்கராயன் கால்வாய் என்று பெயர் பெறுகிறது. காலிங்கராயன் குறித்த கல்வெட்டுகளும், அணைகட்டிய செய்திகள் தாங்கிய பட்டயங்களும். செப்பேடுகளும், கைபீதுகளும் (வம்சாவளித்திரட்டு) பிரபல கல்வெட்டு அறிஞர் திரு. புலவர். செ. இராசு அவர்களால் தொகுக்கப் பட்டுள்ளது. இது மிக அரிய முயற்சியாகும். காலிங்கராயன் கால்வாய் குறித்த புதிய பார்வை என்பது அவசியமாகிறது. இதுவே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பொதுவாக முற்காலங்களில் எழுதப்பட்டுள்ள பட்டயங்களிலும், செப்பேடுகளிலும், கைபீதுகளிலும் புனைவுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் சிலசமயங்களில் உண்மையை புனைவுகள் மூடி இருப்பதைக் காணமுடியும். எனவே, கல்வெட்டுகளில் உள்ள புனைவுகளை நீக்கி உண்மையை கண்டறிய முடியும்.
1. திங்களூர் அழகப் பெருமாள் கோவில் கல்வெட்டு வைணவர்களுக்கும், நம்பிமார்களுக்கும், உணவளிக்க தரிசு நீக்கி, குளங்கள் வெட்டி சில வரிகளை உருவாக்க, காலிங்கராயன் உத்தரவு.
2. விசயமங்கலம் நாகேஸ்வரசாமி கோயில் கல்வெட்டு, வாகைப்புதூரில் பாழ்பட்டு கிடந்த நிலத்தைச் சீர்படுத்தி, வாரத்திற்கு விட்டு வருமானத்தை கோயிலுக்கு வழங்கிய காலிங்கராயன் உத்தரவு.
3. நெரூர் அக்கீசுவரர் கோயில் கல்வெட்டு, பாழ்பட்டு கிடந்த புறம்போக்கு நிலம் மற்றும் நன்செய், தோட்டம் முதலிய உருவாக்கி, குளம்வெட்டி, கச்சிராய நல்லூர் என்ற ஊரை ஏற்படுத்தியது குறித்து உத்தரவு.
4. எலத்தூர் சோழீச்சுவரர் கோவில் கல்வெட்டு, குளத்தை திருத்தி, பயிர்செய்து நிலத்திற்கான வரியை கோயிலுக்கு செலுத்த காலிங்கராயன் உத்தரவு.
5. சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில் கல்வெட்டும் குளத்தை செப்பனிட்டு நிலம் திருத்தி, வரிகளை மேற்படி கோயிலுக்கு வழங்க உத்தரவு.
6. குன்னத்தூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் கல்வெட்டு காட்டை அழித்து, சாகுபடி நிலங்களை உருவாக்கி, குடியேற்றம் செய்த உத்தரவு.
7. கொடுமுடி அம்மன் சந்நிதி கல்வெட்டு, திருச்சிற்றம்பல நல்லூர் நாயனாருக்கு நில வருமானம் சேர உத்தரவு.
8. வெஞ்சமாங் கூடலூர் கல்வெட்டு, கண்ணப்ப நல்லூருக்கு நஞ்சை நிலம் வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகிறது.

மேற்கண்ட செய்திகள், காலிங்கராயன் கால்வாய் மட்டும் வெட்டவில்லை, மாறாக குளம் செப்பனிடல், தரிசு புறம்போக்கு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவந்து, அவற்றை கோயில்களுக்கும், புரோகிதர்களும், வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். நல்லூர் என்பது பிராமணர்கள் குடியிருக்கும் பிரமதேய ஊர்களாகும். காலிங்கராயன் அரசு அதிகாரி மட்டுமல்ல, கொங்கு மண்டலத்தில், வேளாளர் பாசனத்தை வசதியை மேம்படுத்தியவரும் ஆவார்.
காலிங்கராயன் கால்வாய் வெட்டி, அணைகட்டிய ஆண்டு கி.பி. 1282 என திரு. புலவர் இராசு அவர்கள் வரையறை செய்துள்ளது சரியே. இதை வரலாற்றுக் குறிப்பு எழுதிய புக்கானன் (1800ல்) உறுதி செய்துள்ளார். கல்வெட்டு குறிப்புகளில் இருந்து, அந்நாளில் கோவில்களுக்கு தேவதானம் என்ற முறையில் நிலமும் பாசன வசதியும் செய்து தருவதும், பார்ப்பனர்களுக்கு, ஊரும் நிலமும் அளிப்பதை பிரமதேயம், சதுர்வேதிமங்கலம், நல்லூர் என்ற பெயர்கள் சுட்டும் இது தவிர அரசுபடை அதிகாரிகளுக்கு மூவேந்தர் வேளாண் என்ற பெயரில் நிலங்களையும், கிராமங்களையும் கொடுப்பது சோழ, பாண்டிய அரசுகளின் வழக்கத்தில் இருந்தது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது சங்க காலத்திலேயே பார்ப்பனர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நிலத்துடன் கூடிய ஊர்களை வழங்கும் பழக்கம் துவங்கிவிட்டது. 10, 11ஆம் நூற்றாண்டுகளில் இவை உச்சத்திற்கு சென்றது. கொங்கு மண்டலத்தில் இது 12, 13ஆம் நூற்றாண்டில்தான் செயல்பட்டது. இவ்வகை நிலமானிய முறையானது சோழப்பேரரசு நிலை கொள்ளவும், தமிழகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆளவும் பயனளித்தது. 12ஆம் நூற்றாண்டு வரை கொங்குநாடு சேர, சோழ பாண்டிய நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததே ஒழிய இனக்குழுக்களை அழித்து புதிய உற்பத்திமுறை தோற்றுவிக்கப்படவில்லை. முல்லை நிலமாதலால், காடும், காடும் சார்ந்த நிலங்களாக கொங்கு காட்சியளித்தது. இங்கு வாழ்ந்த இனக் குழுக்கள், வேடர், ஆயர் மற்றும் எயினர் ஆகும். வேடர்கள் வேட்டைத் தொழிலையும் ஆயர்கள் கால் நடைவளர்த்தல், தினை, வரகு, அவரை, துவரை முதலிய பயிர்களை பயிரிடல் (விண்ணோக்கிய வேளாண்முறை) என்ற முறையில் பொருளாதார வாழ்க்கை இருந்தது. இவர்களுக்குள் கூட்டப்பிரிவுகள் இருந்தன. தாம் வாழும் முறை மற்றும் இடங்களுக்கேற்ப கூட்டப்பெயர்கள் நிலைத்து இருந்தன. திருமணத்திற்கான ஒழுக்க முறை கூட்டங்களிடையே வரையறை செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் மருத நிலப்பகுதிகளில் இனக்குழு சிதைவடைந்த நிலையில், கொங்கில் மட்டும் சிதையாமல் 12ஆம் நூற்றாண்டு வரையில் நீடித்தது. அது மட்டுமல்ல புறம்போக்கு நிலங்கள் ஏராளமாகவும் இருந்தன.
13ஆம் நூற்றாண்டில் சோழ, பாண்டிய அரசுகளின் பொருளாதார தேவை கூடியது. நெல் அதிக உபரியை வழங்கும் தானியம் என்பதால், நெல்விளையும் நிலங்களிலும் முல்லை மற்றும் குறிஞ்சி நிலங்களிலும் பயிரிட முயற்சி எடுத்தனர். எனவே, பிரமதேயம் மற்றும் கோயில்கட்டி அதற்கான நிலங்களை உருவாக்க முனைந்தது. கொங்கு நாடு அதற்கு வசதியாக இருந்தது. இந்நிலத்தில் அமராவதி, நொய்யல், பவானி போன்ற ஆறுகளும், சண்முகநதி, பாலாறு, பெருந்தலாறு போன்ற சிறிய நதிகளும் ஓடிக்கொண்டிருந்தது. பல்வேறு கூட்டப்பெயர்களுடன் வேட்டுவர்களும், ஆயர்களும் இனக்குழுவாக வாழ்ந்து வந்தனர். வேட்டுவர்கள் வேட்டைத் தொழிலும், ஆயர்கள் கால்நடை வளர்ப்பும், தானியம் பயிரிடல் என்ற அளவில் பொருளாதார வாழ்வு இருந்தது. “ஆ கெழு கொங்கர்’’ “கொங்கர் ஆ பரந்தன்ன’’ என சங்க இலக்கியம் இவர்களைப் பதிவு செய்துள்ளது.
கொங்கு தவிர்த்த இதரப்பகுதிகளில் வேளாண் தொழில் செய்வோரை, பாண்டிய வேளாளர், சோழிய வேளாளர் என அழைக்கப்பட்டு வந்தனர். இங்கு வேளாளர் என யாரும் இல்லை. எனவே, தஞ்சை தொண்டைமண்டலம் (புதுக்கோட்டை) ஆகிய பகுதிகளில் இருந்து வேளாளர்கள் கொங்கில் குடியேறினர் (நிக்கல்சன் 1887:86) இதையே, ”சோழன் பூர்வபட்டயம்’’, “அண்ணமார்கதை’’, “கொங்கு வேளாளர் புராணம்’’, ஆகியன உறுதிப்படுத்துகிறது. குடியேறிய வேளாளர்கள் கொங்கிலுள்ள ஆயர்களுடன் ரத்தக்கலப்பு ஏற்பட்டு வேளாளர் என்ற புதியப் பெயரைத் தாங்கி நின்றனர். இவர்கள் குடியேறிய பின்பே, நீர்பாசனமுறை கொங்கு நாட்டில் உருவானது. குடியேறிய வேளாளர்கள் ஏற்கெனவே ஆயர்களிடம் உள்ள கூட்டம் (குலம்) முறையை ஏற்றுக்கொண்டனர். ஆயர்கள் அவர்களிடம் வேளாண் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டனர். இதன் பிறகே கல்வெட்டுகளில் வேளாளர் என்று பொறிக்கப்பட்டுள்ளது என அறிகிறோம். வேளாளர் என்ற சொல்லுக்கு வெள்ளத்தை ஆள்பவர் என்ற பொருள் உண்டு. “கள்ளர், மறவர், கனத்த அகம்படியார் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளர் ஆயினர்’’, என்ற பழமொழிபோல் கொங்கு ஆயர்களே, குடியேறிய வேளாளர்களுடன் கலப்பு கொண்டு “கொங்கு வேளாளர்’’ ஆயினர் என வரலாற்று ஆசிரியர்கள் (ஸ்டைன், பேக்கர், தர்ஷன், மார்டன், நிக்கச்லன்) தங்களது ஆய்வில் தெரிவிக்கின்றனர்.
சோழப்பேரரசு, தனது தேவைக்காக, சிறந்த உபரியான நெல் சாகுபடிக்கு ஏற்றவாறு கொங்குநாட்டு நிலங்களை கிணறு, குளம், ஆறு இவைகளின் மூலம் பாசன வசதி செய்து, அவற்றை கோயில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும், அரசு அதிகாரிகளும் அளித்தனர் என்பதே கொங்கு நாட்டின் 13வது நூற்றாண்டு வரலாறு இவை குறித்த கல்வெட்டுகள் 12, 13ஆம் நூற்றாண்டில் ஏராளமாக பொறிக்கப்பட்டுள்ளது என கல்வெட்டில் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாகவே காலிங்கராயன் வாய்க்கால் உருப்பெற்றுள்ளது. அமராவதி நதியின் ஓரத்தில் உள்ள ஊர்களான கொழுமம், கொமரலிங்கம், ருத்ரபாளையம், தாராபுரம், கரூர் வரையில் இந்தப்பாசனம் உண்டு. இந்த ஊர்களில் பார்ப்பனர்களின் குடியிருப்பும் அதிகம். அதேபோல் காலிங்கராயன் கால்வாய் கரூரை நெருங்கி இருக்கும் ஊர்களான, கொடுமுடி, வெங்கம்பூர், ஊஞ்சலூர், கொளாநல்லிள ஆகிய இடங்களையே அதிகமாக வளப்படுத்துகிறது. போகிற வழியில்கூட பிராமண பெரிய அக்ரஹாரம் என்ற குடியிருப்பு தோற்று விக்கப்பட்டுள்ளது.
கரூர், சேது பேரரசின் முக்கியமான கேந்திரமான நகரம். கரூருக்கும், வஞ்சித்துறை முகத்திற்கும் பெருவழிப்பாதை இருந்துள்ளது. எனவே, கரூரை மையப்படுத்தியே, காலிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டு, நீர்ப்பாசன வசதி செய்யப் பட்டுள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன் தேவை இதுவாகத்தான் இருந்துள்ளது. இன்றுள்ள பாசூர், சாவடிப்பாளையம், மலையம்பாளையம் போன்ற ஊர்கள் அன்று என்னவாக இருந்தது என்பது ஆய்வுக்குரியது. கோவில்களுக்கும், பிராமணர்களுக்கும், அதிகாரிகளின் நலனுக்கும், உருவாக்கப்பட்டதே காலிங்கராயன் வாய்க்கால். 800 ஆண்டுகளுக்கு முன்பு, கொங்கு நாடு அடர்ந்த மரங்களுடன் கூடிய காடாக இருந்ததால், கால்வாய், காவிரி நதிக்கரையை ஒட்டியே மேட்டுப்பாங்கான நிலத்தில் வளைந்து செல்வதை அறிய முடிகிறது. அரசை வலுப்படுத்தும் பொருளாதார விஸ்தரிப்பே, காலிங்கராயன் கால்வாய் உருவாக்கம் என்பது தெளிவானது.
காலிங்கராயன் என்ற பெயர் அவர் வெட்டிய கால்வாய் மூலம் அறியப்படுகிறது. கல்வெட்டுகளில் அவர் உருவாக்கிய சாசனங்கள் மூலம் அவர் அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அதிகாரி எனத்தெரிகிறது. காலிங்கராயன் என்பது அவருக்குக் கிடைத்த பட்டம் என திரு. புலவர் செ. இராசு அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். “பாண்டியர் ஆட்சி கொங்கு நாட்டில் பரவியிருந்தது என்பதாலும், காலிங்கராயன் என்ற பட்டம் அளிக்கும் வழக்கம் கி.பி. 12ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடர்ந்து உள்ளது என்பதாலும் காலிங்கராயன் என்ற பெயரே அரசன் அளித்த பட்டப் பெயராக நம் தலைவனுக்கு உள்ளமை விளக்கும்’’ (புலவர் செ. இராசு 2007:24) இது உண்மையாகும். அன்றைய வேளாண் தொழிலே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை. சோழப் பேரரசில் வேளாண் தொழிலில் பல விதமான வேலைப்பிரிவினைகள் இருந்துள்ளது. அதில் ஒன்று பாசன வசதியை உருவாக்குதல் ஆகும். ஆற்றலும், திறமையும் கொண்ட, அதில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளுக்கு காலிங்கராயன் என்ற பட்டத்தை வழங்குவது சோழப்பேரரசின் வழக்கத்தில் இருந்துள்ளது. மேலும் “அணைக்கட்டுவதற்கு முன்னரே காலிங்கராயன் என்ற பெயர் நம் தலைவனுக்கு வழங்கியது என்பதையும்’’ புலவர் செ. இராசு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே, காலிங்கராயன் என்பது இயற்பெயரல்ல, அரசால் அளித்த பட்டம் என்பதும், அப்பட்டம் காலிங்கராயன் அணைகட்டுவதற்கு முன்னரே பெற்றிருந்தார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. கால்வாய் வெட்டுவதற்கு முன்பே, காலிங்கராயன் என்ற பட்டத்தைப் பெற்ற ஒரு அதிகாரி, தனது ஆற்றலையும், திறமையையும் அங்கு உபயோகப்படுத்தி, அரசிடம் இப்பட்டத்தைப் பெற்றார் என்ற கேள்வி எழுகிறது.
வேளாண்துறைக்கென பல்கலைக்கழகம் இல்லாத காலத்தில், படித்துப் பட்டம் பெற்றிருக்க முடியாது. சூத்திரர்கள் கல்விக் கற்கக்கூடாது என வர்ணதர்மம் நீடித்துள்ள சமூகத்தில், கல்வியால் பெற்றிருக்க இயலாது. தனது திறமையை மருதநிலப் பகுதிகளான தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை போன்ற இடங்களில் நீர்ப்பாசன கட்டமைப்பில் தனது ஆற்றலை செயல்படுத்தி, இப்பட்டத்தை பெற்றிருக்க வேண்டும். முல்லை நிலத்தில் பிறந்து வளர்ந்த யாரும் அக்காலத்தில் இத்திறமையை பெற்றிருக்க வழியில்லை. எனவே, இவரது பிறப்பு என்பது மருத நிலப்பகுதி எனக் கொள்ள இடமுண்டு. வேளாளர்களை புலப்பெயர்வு செய்ய வைத்து, தானும் இங்கு புலம் பெயர்ந்து வந்திருக்க வேண்டும். அரசின் ஆணைக்கு ஏற்பவே இது நடந்திருக்க வேண்டும். இவருக்கான பணி என்பது காடுகள் அடர்ந்த கொங்குப்பகுதியில், ஏற்கெனவே சிறிய அளவில் வேளாண் (நீர்ப்பாசன வசதியற்ற நிலையில்) பயிர் தொழில் செய்த ஆயர்களின் உதவியுடன் கிணறு, குளம் மற்றும் ஆறு இவைகளின் பாசன வசதியை ஏற்படுத்துவதே ஆகும்.
கொங்கு நாட்டில் முதன்முறையாக நீரை அடக்கி பாசனம் என்ற புதிய வேளாண் உத்தியை உருவாக்கியதால் மக்கள் மனதிலும், கல்வெட்டுகளிலும் இடம் பெற்றிருக்கிறார். ஒரு புதிய வேளாண் புரட்சியை தோற்றுவித்தவர். அதன் பயன் முழுவதும் முதன்முதலாக வேளாளர் என்ற ஆயர்களுக்கு பயனளித்ததாலும், அவர்கள் காலிங்கராயனை சுவீகரித்துக் கொண்டனர். பின் நாளில் வேட்டுவர்களும், வேளாண் தொழிலை சுவீகரித்துக் கொண்டதால் “வேட்டு வேளாளர்’’ என்று தங்களை அழைத்துக் கொண்டனர். மருத நிலப்பகுதியில் இருந்த வேளாளர்கள் தமது சாதிப்பெயரை பிள்ளை என மாற்றிக்கொண்டது போல் கொங்கு வேளாளர்கள் தங்கள் பெயரை கவுண்டர் என மாற்றிக்கொண்டனர். வேட்டுவர்களும் பின்பு தங்களை கவுண்டர் என மாற்றிக்கொண்டனர். இது தங்களை மேல்நிலையாக்கம் செய்வதற்கான நடவடிக்கையாகும். பொதுவாக ஒவ்வொரு சாதியும் தங்களை மேல் நிலையாக்கம் செய்யும் பொருட்டு, புராண இதிகாசங்களுடன் தொடர்புப்படுத்திக் கூறும் மரபு நமது நாட்டில் உண்டு. கைக்கோளர்கள், தங்களை முருகக்கடவுளின் தளபதியான “வீரபாகுவின் வழித்தோன்றல்’’ எனக் கூறிவருகின்றனர். காளகஸ்திப் பகுதியில் வாழ்ந்த வேட்டுவக் குடியினரான கண்ணப்பநாயனரோடு, கொங்கு நாட்டு வேட்டுவ மக்களும் தங்களை தொடர்புபடுத்திக் கொண்டதாக (செ. இராசு 1991.153) அறிகிறோம். அதுபோலவே கொங்கு நாட்டில் நீர்ப்பாசனப் புரட்சி செய்த ஆற்றல்மிகு, காலிங்கராயன் என்ற பட்டத்திற்கு உரியவரை (இயற்பெயர் அறிய முடியவில்லை) தமது சாதிக்குரியவர் எனப்பதிவு செய்வதின் மூலம் தமது சாதியை மேல்நிலையாக்கம் செய்ய முயல்கின்றனர். வேளாளக் கவுண்டருக்குள்ளும் அவரை ஒரு கூட்டத்திற்கு மட்டுமே உரியவராக பதிவு செய்து அக்கூட்டம் தம்மை மேல்நிலைப்படுத்திக் கொள்ள தொடர்முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தமிழகத்து மக்களின் நடைமுறை சார்ந்த மரபேயாகும்.

காங்.,கூட்டணியில் இருந்து திமுக வெளியேறாது:கொமுக......

ஆத்தூர் : ஆத்தூரில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின்  ஆலோசனைக் கூட்டம், அதன் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன் கூறியதாவது : தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 60 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்; காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறாது; 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் திமுக வின் ‌வெற்றியை எவ்விதத்திலும் பாதிக்காது; திமுக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளது; தமிழகத்தில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் எந்தெந்த தொகுதிகளில் ‌ போட்டியிடும் என்பது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் நாளை தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி  தினமலர்  .

Saturday, March 5, 2011

*ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி எழுதிய மடல்*


*"2G ஸ்பெக்ட்ரம்"*
ஒரு இந்தியன் மூலம் செய்யபட்ட முறைகேடு, ஊழல் ஒவ்வொரு இந்தியனையும் வெகுவாக
பாதித்துள்ளது. அதில் தலித், முதலியார், பிராமிணர், வன்னியர், முஸ்லிம்,
கிறித்துவன் என்று பாகுபாடு இல்லை. ஊழல் செய்தவருக்கே தான் செய்யபோகும் இந்த
ஊழல் தன்னை சார்ந்த ஜாதி மக்களையும் சேர்த்துதான் பாதிக்கும் என்பதை தெள்ள
தெளிவாக தெரிந்துகொண்டுதான் இந்த ஊழலை சுயநலத்துடன் செய்துள்ளார். அப்படி
இருக்கையில் எங்கிருந்து தனியாக வந்தது "தலித்" என்னும் மந்திர சொல்.
மன்னிக்கவும் தந்திர சொல். அனைத்து தகுதிகளுடனும், போதிய அனுபவமும் உள்ள S.Tel
நிறுவனம் சுமார் 13,000 கோடிக்கு வங்கி காசோலை கொடுத்து 2G உரிமத்தை வாங்க
முன்வந்தது. கிடைக்காமல் பிரதமர் அலுவலகத்துக்கே நியாயம்
கேட்டு கடிதம் எழுதி உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து நியாயமோ அல்லது
பதில் கடிதமோ வரவில்லை. இதனால்தான் அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகி
நியாயம் கேட்டுள்ளது. அதன் பின்னர் தான் பத்திரிகைகள், எதிர்கட்சிகள், பொதுநல
அமைப்புகள், CAG ,PAC போன்றவை முழித்தனர் . பல தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு
விதிகளுக்கு முரணாக உரிமங்கள் வழங்கபட்டுள்ளது.

அதுவும் வெறும் 1200, 1300,1650 கோடிகளுக்கு வழங்கபட்டுள்ளது. உண்மை இவ்வாறு
இருக்க சில அரசியல் தேசதுரோகிகள் 2G - யில் ஊழல் செய்யப்படவில்லை கைபேசியில்
பேசுவதற்கு உண்டான கட்டணம் குறைக்கபட்டு புரட்சி செய்யபட்டுள்ளது என்று பொய்களை
மக்களிடம் பரப்புவது தெரிந்தே தவறு செய்வதில் நல்ல புலமை அடைந்தவர்கள் என்பது
நிரூபணம் ஆகிறது. மக்களை பற்றியோ நாட்டை பற்றியோ எள்ளளவும் கவலை படாதவர்கள்
என்பது நன்கு புலப்படுகிறது. இந்த கட்டணம் குறைந்தது சந்தையில் நிறுவனங்களுக்கு
இடையேயான போட்டியின் காரணம் என்பது படித்த அறிவார்ந்த மக்களுக்கு நன்றாக
தெரியும். அதை போதிய
விளக்கங்களுடன் விவரிக்க விரும்புகிறேன்.

இதை 1999 ஆண்டில் இருந்து ஆரம்பம் செய்வது நல்லது. இந்த ஆண்டில் தான்
தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள்
மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு.
பலலட்சங்கள், சில கோடிகள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைவரிசை
மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது.
ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து
உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு ரூபாய் 1.40
கட்டணம் வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்
என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்திற்கு பேசி
நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள்
விரையம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.
நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக
நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு
புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை
அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை
சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான
மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர்.
ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத
நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது.

தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட்
அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க
வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும்.
டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு
அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

*நியாய கணக்கு:*
*இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல்
உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை
ஒரு நாளைக்கு வெறும் ஐந்து நிமிடங்கள் பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம்.
ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.
அப்போ 5x0.40 =2.௦ ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது.
60 கோடி கைபேசிகள். 60x2 = 120 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது.
ஒரு மாதத்திற்கு 30x120 = 3600 கோடிகள்.
ஒரு வருடத்திற்கு 365x3600 = 13,14,000 கோடிகள்.
2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ
குறைந்தபட்ச
வருமானம் இன்றுவரை 26,28,000 கோடிகள். இதுதான் கணக்கு. இது ஒரு நாளைக்கு வெறும்
ஐந்து நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு
கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, ISD மற்றும் ஐந்து நிமிடத்திற்கு
அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக
கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே
முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது
"INFINITIVE". இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது
மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா?
நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த
மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல்
பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது.
விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர
மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும்
மாறுவார்கள்.
*
*துரோகம்-1: *
உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம்
பொறுமானம் உள்ள
(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள்
உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு
விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய,
மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

*துரோகம்-2: *
பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு
நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது
பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை
சென்று அடைந்துள்ளது.

*துரோகம்-3: *
தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள்
இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும்
அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர
ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல்
தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில்
மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட்
நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால்
சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட
மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு
"S.TEL<http://s.tel/>போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை
என்ற சந்தேகம் தெளிவாக
எழுகிறது.

*துரோகம்-4: *
MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய
ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு
வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து
இருப்பார்கள்.

*துரோகம்-5: *
தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி
நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும்
அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும்
பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய
அச்சுறுத்தல்.

*துரோகம்-6: *
நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட
ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை
கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில்
ஆதாரங்கள், சாட்சிகள் சுளையாக இருந்தும் குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை
எடுக்காதது மக்களுக்கு இழைக்கபட்ட ஆறாவது துரோகம். முதலில் வருபவருக்கே
முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட
பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

*துரோகம்-7: *
இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு
கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது
மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும்
இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த
உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள்
என்ற ஆணவ நினைப்பு.

*துரோகம்-8: *
நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு
தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது
மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

*துரோகம்-9:*
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில்
புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக
தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு
கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று
உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி
ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை
கண்டிருக்கலாம்.

*துரோகம்-10: *
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை
விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக
தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே
மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு
செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு
இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.
இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி.
நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை
அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

*இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த
ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி?
ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை
பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை
குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய
சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின்
விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று.

இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு
ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான்
செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல.
அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு.
உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து
பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும்
பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும்
ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம்
ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள்.
சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை
தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின்
செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள்
கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும்
உயரபோவதில்லை. இலசவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும்
மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது.
இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

மக்கள்தொகை நாளுக்கு நாள் பெருகுகிறது. ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் அதை விட
அதிகமாகிறது. ஊழலை ஒழிக்காமல் 5 %, 6 % வளர்ச்சி என்று அரசு கூறுவது ஒரு
வகையிலும் இந்தியாவை வல்லரசாக்காது. இந்த எண்ணிக்கையிலும் எவ்வளவு உண்மை
உள்ளதோ! இறைவனுக்கே வெளிச்சம்.
*
எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை
ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள்
உள்பட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள்,
புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். நன்றி.



நன்றி  கணியப்பன் ...

கொங்கு பாடல்


தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி முறிந்தது....


சென்னை : மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் இருந்து மத்திய அரசிற்கு ஆதரவளிப்பது என்றும் தி.மு.க., உயர்மட்ட செயல்திட்ட குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு, ஒருங்கிணைப்பு குழு போன்ற நிபந்தனைகள் விதித்தது. இதனால் 3 முறை நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கவில்லை. தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை தர முன்வந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி 63 இடங்களும், வேண்டிய தொகுதிகளும் தர வேண்டும் என கோரியது. இதற்கு தி.மு.க.,வில் எதிர்ப்பு கிளம்பியது.



இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை விவரம் : சட்டசபை தேர்தலுக்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பணியில் தி.முக., ஈடுபட்டது.சோனியாவை நான் டில்லியில் சந்தித்த பின், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என, அறிவித்தேன். காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வந்த போது, 2006ம் ஆண்டு தேர்தலில், போட்டியிட்ட விவரங்கள் தி.மு.க., சார்பில் எடுத்துக் கூறப்பட்டது.

தி.மு.க., - காங்கிரஸ் - பா.ம.க., மீண்டும் உறவு கொண்டுள்ள நிலையில், அந்த கட்சிகள் போட்டியிட்ட இடங்களைத் தவிர்த்து, எஞ்சியுள்ள மார்க்சிஸ்ட் கமயூ., இந்திய கம்யூ., போட்டியிட்ட 23 இடங்களை புதிதாக சேர்த்துள்ள விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் போக, மீதமுள்ள இடங்களை தி.மு.க., - காங்கிரஸ் பகிர்ந்து கொள்ளலாம் என பேசப்பட்டது.

அவ்வாறு கணக்கிட்ட போது, காங்கிரஸ் கட்சிக்கு 51 இடங்கள் வந்தன. அந்த இடங்களை அதிகமாக்க வேண்டும் என்ற காரணத்தால், 51 இடங்கள் 53 என்றாகி பின், 55 என்றாகி, 58 என்றாகி கடைசியாக 60 இடங்கள் என்று குலாம் நபி ஆசாத் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதை மேலிடத்தில் தெரிவித்து விட்டு உறுதி செய்வதாகக் கூறினார். ஆனால், அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வராததோடு, இன்று (நேற்று) இரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 63 சீட்கள் ஒதுக்க வேண்டும் என்றும், கேட்கும் தொகுதிகள் அனைத்தையும் தரவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

காங்கிரசிற்கு 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் கேட்பதும், அவர்கள் கேட்கும் இடங்களையெல்லாம் கொடுக்க வேண்டும் என கேட்பதும் முறைதானா என்பதை, அந்த கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து இன்று மாலையில் நடக்கவுள்ள தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழுவில் உரிய முடிவு எடுக்கப்படும். என கூறியிருந்தார்.

கொங்கு கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மை-யானவை

மார்ச் 5 :கொங்கு நிலம் பற்றியும் அப்பகுதி மக்கள் பற்றியும் சங்க இலக்கியக் காலம்தொட்டு கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன. அகழ்வாய்வுத் தரவுகளும் இப்பகுதியின் வாழ்வியல் தொன்மைக்குச் சான்றளிக்கின்றன. இந்நிலையில் நமது பெயரியல் ஒப்பாய்வு வியக்கத்-தக்க பல சான்றுகளை வெளிக்கொணர்கிறது. கொங்கு என்ற இடப்பெயர் மட்டுமன்றி தமிழ்நாட்டுக் கொங்கு மண்டலத்தின் வரலாற்று மரபு சார்ந்த நிலப் பிரிவுகளான ஆறை, கோவங்கம், கவைய, கவச, செம்ப, தணக்க, தலைய, அரைய, பழன, வாரக்க, முளசை, காங்கேய, தூர, அண்ட, மன்னி, மண, உருக்கா, வாழவந்தி, படி போன்ற பெயர்களை அப்படியே நினைவுறுத்தும் இடப்பெயர்களைச் சிந்து வெளியிலும் அதற்கு அப்பாலும் உள்ள வடமேற்குப் புலங்களிலும் காண முடிகிறது.

கொங்கு வேளாண் குடிகளின் சமூகவியல் வரலாற்றில் காணி ஊர்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.களங்காணி, மானூர், பாப்பிணி, முளசி, தோளூர், பழனி, தூசி, ஆளியார், கொற்றை, கோக்-கலி, கோட்டூர், கூகலூர், நவனி, திடுமல், மொஞ்-சனூர், பட்டாலி, கத்தேரி மற்றும் இன்ன பிற காணி--யூர்ப் பெயர்களை முழுக்க ஒத்திருக்கும் பெயர்கள் அப்பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளன.


கொங்கு வேளாளர்களின் அடிப்படையான குழு அடையாளம் அவர்களது கூட்டம் ஆகும். சிந்து வெளிப்பகுதியிலும் அதற்கு அப்பாலும், கொங்கு வேளாண் குடியினரின் கூட்டப் பெயர்களை (Clan names) நினைவுறுத்தும் இடப்பெயர்கள் வழங்குகின்றன. அந்துவன், ஆதி, அடகர், அழகன், ஆவன், ஆடர், ஓதாளன், கண்ணர், செங்கண்ணி, சேரன், பாண்டியர், பில்லன், ஆடை, ஆவலன், மணியன், மாடை, ஆந்தை, மூலன், மூத்தன், மேதி, வாணி, தூரன், கல்வி, காமன், காடை, கொடியன், கொற்றன், கோவன், சேகன், நாகன், நீலன், பதரி, உண்ணகர், ஓசை, கம்பன், காவலன், காரை, கீரை, கொள்ளி, சோமன், தட்டை, நந்தர், நாரை, நேரியன், பாசை, வேந்தர், வெளியன், ஈஞ்சர், ஒழுக்கர், குழாயர், கூறை, செம்பர், சேடர், பனையர், அவுரியன், பூச்சந்தை, பூசர், பெரியன், பொன்னன், மயிலர், மழவன், வண்ணக்கர், தனஞ்செய், தோடை, பவளர், அவுரியன், ஊரியன், காவூரி, குங்கிலி, கொம்மையர், கோரக்கர், சாத்தந்தை, செழியன், தோயன், நெய்தலி, பணகன், வல்லி, தழிஞ்சி, பயிரன், பதுமன், கொண்டரங்கி, செல்லன், நீருணி போன்ற கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்களை நினைவுறுத்தும் இடப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.
இந்தக் கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மை-யானவை. சங்க கால அரசர் பெயர், குறுநிலத்-தலை-வர் பெயர், புலவர்களின் பெயர்கள், பழங்-காலக் கல்வெட்டுகள், மட்பாண்ட ஓடுகளில் குறிக்-கப்பட்டுள்ள தனி மனிதர்களின் பெயர்களில் கொங்குக் கூட்டப் பெயர்களில் சிலவற்றின் பயன்-பாட்டைக் காண முடிகிறது. இதைக் கொண்டு, இப்பெயர்களின் பயணத்தின் தொன்மையை அளவிட முடியும்.

Thursday, March 3, 2011

கொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண முறை


பண்டைய தமிழ் நாட்டில் தொழில் முறையில்
இனங்கள் ஏற்பட்டன. வேளாண்மை செய்தவர்கள்
வெள்ளாளர் என்றழைக்கப்பட்டனர். கொங்கு நாட்டில்
வேளாண்மை செய்தவர்கள் கொங்கு வெள்ளாளர்
என்றழைக்கப்பட்டனர். வேளாண்மை செய்தவர் என்ற
பொதுப்பிரிவில் வேளாளக் கவுண்டர்கள் ஒரு பிரிவினர் ஆயினர்.

திருமணங்களும், கொங்கு வெள்ளாளர் திருமணச் சடங்குகளும்:

கொங்கு வெள்ளாளர் திருமண நிகழ்ச்சிகள் தொடர்ந்து மூன்று
நாட்கள் நடைபெற்று வந்தன. முதல் நாள், 'நாள் விருந்து'. இந்நாளில்
நெருங்கிய உறவினர் மணமகன், மணமகள் வீட்டார்க்கு விருந்து
செய்வர்.

இரண்டாம்நாள்

உறவினர்களுடன் இணைந்து மண ஏற்பாடுகள் செய்வர்.
பந்தலிடுதல், முகூர்தக்கால் வெட்டுதல், மணமகனுக்குக்
குடிமகன் முடிதிருத்துதல், கொட்டு முழக்கு வாயிலாகத்
திருமணம் நடைபெறத் தொடங்குவதை ஊரார்க்கு அறிவித்தல்,
மணமக்கள் வீட்டில் விருந்திடுதல், மணமகன் மணமகள்
வீட்டிற்குப் புறப்படுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மணமகள் வீட்டில்தான் மண ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மூன்றாம் நாள்


முகூர்த்த நாள். உரிய சடங்குகள் முடிக்கப்பெற்று மணமக்கள்
மணமேடையில் அமர்த்தப் பெறுவர். மணமகளுக்கு மங்கல
நாண் அணிவிக்கப் பெற்று, மங்கல வாழ்த்து ஓத, திருமணம்
நிறைவுக்கு வரும். விருந்துடன் திருமணம் முடிவுறும்.

திருமண நிகழ்ச்சிகளை இனப் பெரியவர் ஒருவரான
அருமைக்குரியவர் நடத்தி வைப்பார்.


மங்கல வாழ்த்து பாடல்:

பெண் பார்ப்பதில் தொடங்கி, திருமணம் முடியும் வரையிலான
எல்லா நிகழ்ச்சிகளையும் இப்பாடல் தொகுத்துரைக்கிறது. ஒரு
பேரரசன் இல்லத் திருமணத்தை விவரிப்பது போல் பாடல்
கருத்துகள் உள்ளன. இப்பாடல் வழியாக அன்றைய கொங்கு
வெள்ளாளரின் நிலை, உறவு முறை, சமுதாய நிலை பற்றி நன்கு
அறிய முடிகிறது. தமிழ் மக்களின் வாய்மொழி இலக்கியத்தோடு
வைத்து எண்ணப்பெறும் தகுதியை இது பெற்றிருக்கிறது.
அகவலில் அமைந்து, ஒரு தனித்த பண் வகையில் பாடப் பெறுகிறது.

கொங்கு வேளாளர் வாழ்க்கை வ‌ர‌லாறு

வெள்ளி : மார்ச் 4, 2011:

கொங்கு வேளாளர் வாழ்க்கை வ‌ர‌லாறு

அருள்பரவும் வேளாளர் பயிர்வளர்த்தால் நீதி அந்தணர் வேள்வி வளரும் அன்பினோடு இவர்கள் படைவாளெடுத்தால் வெற்றி அரசர் படைவாள் எடுக்கும் கருது தானியராசி இவர் குவித்தால் வணிகர் கனகராசியெலாம் குவிப்பர் காதலுடன் ஏர்த்தொழில் நடத்தினால் மற்றுள்ளோர்கைத்தொழில் எல்லாம் நடக்கும் உரிய வள்ளத்தில் இவர் அளந்த பின் நாரணன் உயிர்க்கெல்லா படி அளப்பான் ஓதரிய வேளாளர் பெருமையால் அன்றிமற்று உலகில் ஒரு பெருமையுண்டோ?"

கொங்கு வேளாளர்
சங்க இலக்கியங்கள் எல்லாம் கொங்கு வேளாளர்களின் குடியியல்,வாழ்வியல்,உழைப்பு,பண்பாடு,அறிவியல்,மருத்துவ அடிப்படையிலான சடங்குகள்,குணவியல்புகள்,ஆகிய வற்றையெல்லாம் கூறுகின்றன.

13ஆம் நூற்றாண்டில் விஜய ந‌க‌ர‌ப் பேர‌ர‌சு கொங்கு நாட்டை 24 நாடுக‌ளாக‌ப் பிரித்தாண்ட‌து.ஊர்த்த‌லைவ‌ர்க‌ள் பெய‌ரால் ஊர்க‌ள் அமைந்தன. த‌ற்கால அமைப்புப‌டி கோவை, சேல‌ம், க‌ரூர், நாம‌க்க‌ல், ப‌ல்ல‌ட‌ம், ப‌ழ‌னி, தாராபுர‌ம், த‌ர்ம‌புரி ஆகியன கொங்கு நாட்டில் அட‌ங்கி இருந்தன.

இந்திய வ‌ர‌ல‌ற்றில் விடுத‌லைப் போருக்கு முத‌லில் வித்திட்ட‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள்தாம்.த‌மிழ் நாட்டில் விடுத‌லைப்போருக்கு முன்னோடியாக இருந்து, வீர‌ம் விளைவித்ட‌வ‌ன் தீர‌ன் சின்ன‌ம‌லை.

தீர‌ன் சின்ன‌ம‌லை க‌ரியான் ச‌ர்க்க‌ரை ம‌ன்றடியாரின் பேர‌ன் ஆவார். மேல‌ப்பாளைய‌ம் காணியாளர் இர‌த்தின‌த்தின் ந‌க‌னாவார்.கி.பி.1756 இல் பிறந்தார். இவ‌ர் அண்ணன் குழ‌ந்தைசாமி, த‌ம்பிசாமி, கிலேதார், குட்டிசாமி ஆகிய மூன்று த‌ம்பிய‌ர்க‌ளை உடைய‌வ‌ர்.இவ‌ர‌து இய‌ற்பெய‌ர் தீர்த்த‌கிரி. வேளாண்குடியில் பிறந்திருந்தாலும் சிறுவ‌ய‌தில் சில‌ம்ப‌ம், வாள், வேல், ப‌யிற்சியில் ஈடுப‌ட்டார். தீர்த்தகிரி த‌ம்பியும், கிலேதாரும் இவ‌ருட‌ன் விட்ட‌ன‌ர். போர்ப் ப‌யிற்சியில் ஆர்வ‌ம்கொண்ட தீர்த்த‌கிரி திப்புவின் ப‌டையில் கி.பி.1775 இல் சேர்ந்தார். த‌ள‌ப‌தியானார். இர‌ண்டாவ‌து, மூன்றாவ‌து போர்க‌ளில் த‌ளப‌தியாக இருந்து ஆங்கில ப‌டைக‌ளை அழித்தார்.

கொங்கு நாட்டு வ‌ரிப்ப‌ணம் திப்புவுக்குச் செல்லாம‌ல் வழி ம‌றித்துப்பிடுங்கினார், ஆங்கிலேய‌ரின் வ‌ரிப‌ணத்தையும் பிடுங்கி கோவை நாட்டில் த‌னி அர‌சு அனமைத்து ஆண்டார். நொய்ய‌ல் ஆற்றின்மேல் க‌ரையில் ஓடாநிலையில் அரண்ம‌னையும், கோட்டைக‌ளையும் க‌ட்டினார்.கி.பி.1779 இல் திப்பு இறந்த‌பின் ஆறு ஆண்டுக‌ள் கொங்கு நாட்டை ஆண்டார். ஆங்கில ஆதிக்க‌த்தை எதிர்த்து நான்குபோர்கள் செய்து வெற்றி பெற்றார். கி.பி.1805 இல் வெள்ளைய‌ரின் வ‌ஞ்ச‌னை வ‌ளையில் சிறைப்ப‌ட்டார். ச‌ங்க‌கிரி கோட்டையில் தூக்கிலிட‌ப்ப‌ட்டார். அவ‌ர‌‌து உயிர்மூச்சு விடுத‌லைப் போருக்கு வித்திட்டது.

பண்டைய‌ கொங்குநாடுகள்‌‌

கொங்குநாடுகள்
இன்றைய‌ ப‌குதிக‌ள்

1).பூந்துறை நாடு
ஈரோடு,திருச்ச‌ங்கோடு.

2)தென்க‌ரை நாடு
தாராபுர‌ம், காங்கேய‌ம்.

3)காங்கேய‌ நாடு
தாராபுர‌ம்,கரூர்.

4)பொங்க‌லூர் நாடு
ப‌ல்ல‌ட‌ம், தாராபுர‌ம்.

5)ஆறை நாடு
கோவை,அவினாசி.

6)வார‌க்கா நாடு
ப‌ல்ல‌ட‌ம் பொள்ளாச்சி

7)திருஆவின் ந‌ன்குடி நாடு
ப‌ழ‌னி, உடும‌லை.

8)ம‌ண நாடு
க‌ரூர் தென்மேற்குப‌குதி

9)த‌லையூர் நாடு
க‌ரூர் தெற்கு, மேற்கு

10)த‌ட்ட‌யூர் நாடு
குளித்த்லை

11)பூவாணிய‌ நாடு
ஓம‌லூர், த‌ர்ம‌புரி

12)அரைய‌ நாடு
ஈரோடு, நாம‌க்க‌ல்

13)ஒடுவ‌ங்க‌ நாடு
கோபி

14).வ‌ட‌க‌ரை நாடு
ப‌வானி

15).கிழ‌க்கு நாடு
க‌ரூர்,குளித்த‌லை

16).ந‌ல்லுருக்காநாடு
பஉடும‌லைப்பேட்டை.

17).வாழ‌வ‌ந்தி நாடு
நாம‌க்க‌ல் வ‌ட‌க்கு, க‌ரூர்

18).அண்ட‌ நாடு
ப‌ழ‌னி தென்கிழ‌க்கு

19).வெங்கால‌ நாடு
க‌ரூர் கிழ‌க்கு

20).காவ‌ழ‌க்கால‌ நாடு
பொள்ளாச்சி

21).ஆனைம‌லை நாடு
பொள்ளாசி தென்மேற்கு

22)இராசிபுர‌ நாடு
சேல‌ம், ராசிபுர‌ம், கொல்லிம‌லை

23).காஞ்சிக் கோயில் நாடு
கோபி, ப‌வானி.

24)குறும்பு நாடு
ஈரோடு

கொங்கு வேளாளர்கள் அல்லது கொங்கு வேளிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளனர். பொதுவில் இவர்களைக் கவுண்டர் என்றும் அழைப்பர். இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் குடியேறி வசிக்கின்றனர்.
இவர்களின் மிக முக்கியமான தொழிலாக விவசாயத்தை அமைத்துக் கொண்டனர். கடும் உழைப்பாளிகளான இவர்கள், காடுகளை சீர் செய்து அருமையான விவசாய நிலங்களாக மாற்றி கொண்டனர். 1960ற்கு பிறகு விவசாயம் அல்லாது, தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.

சமுதாய அமைப்பு

கொங்கு வேளாளர் தங்களுக்குள் பல குழுக்களாகப் பிரிந்து, அந்த குழுக்களை குலங்கள் என்றும், கூட்டங்கள் என்றும் வகைப்படுத்திக் கொண்டனர். அவ்வாறு ஏற்படுத்திக் கொண்ட தங்கள் குலத்தை (கூட்டத்தை) சேர்ந்தவர்கள் பங்காளிகள் என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்களுக்குள், அதாவது பங்காளிகளுக்குள், திருமண உறவை ஏற்படுத்திக் கொள்வதில்லை.

 குலதெய்வம்

குல(கூட்ட)ப் பிரிவுகள் சிறுப்பிரிவாக பிரிந்து தங்களும், தங்களுடைய சந்ததிகளும் வழிப்பட வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் அவர்களுக்கு பிடித்த சாமி சிலைகளை அமைத்தனர். அந்த சாமிகளை குலதெய்வமாக வழிப்பட ஆரம்பித்தனர். தற்பொழுது பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உரிமை வாரிசுகளாக குலத்தெய்வக் கோவில்களுக்கு உள்ளனர் என்பது சிறப்பு. அவர்களே தங்களுடைய குலத்தெய்வக் கோவில்களை சில வருடங்களுக்கு ஒருமுறை செப்பனிட்டுக் கொள்கின்றனர்.