Friday, March 9, 2012

மின்வெட்டை கண்டித்து அவினாசி ஒன்றிய ஆர்பாட்டம்



அவினாசி ஒன்றிய , நகர  கொங்குநாடு முன்னேற்ற கழகம்  சார்பாக , தமிழ்நாட்டில்  நிலவிவரும்  அபரிமிதமான  மின்வெட்டு  மற்றும்  பல்வேறு  பிரச்சனைகள்  சம்மந்தமாக 09 /03 /2012  அன்று  காலை 09 -00  மணியளவில்  அவினாசி பாலச்சந்தர்  மருத்துவமனை  அருகில் " மாபெரும்  ஆர்ப்பாட்டம் " நடைபெற்றது .
                               ஆர்ப்பாட்டத்திற்கு கொ.மு.க மாநில ஒருங்கிணைப்பாளர்  திரு.பொன்னுகுட்டி அவர்கள்  தலைமை  தாங்கினார் , மாநில செயற்குழு  உறுப்பினர் திரு.விநாயக செல்வராஜ் , திருப்பூர்  வடக்கு மாவட்ட  செயலாளர்  திரு.V . லோகநாதன் ,மாவட்ட வர்த்தக அணி செயலாளர்  திரு.சுதர்சன் கந்தசாமி , ஒன்றிய தலைவர் திரு.S .செல்வராஜ்  ,ஒன்றிய  செயலாளர் 
திரு.S . கணேசன் , ஒன்றிய பொருளாளர்  திரு . S .அவினசியப்பன் ,ஒன்றிய மாணவரணி செயலாளர் கொங்கு சங்கர் மற்றும் திருப்பூர் மாநகர செயலாளர்  திரு.ரோபோ ரவி  ஆகியோர்  முன்னிலை வகித்தனர் .
                              சிறப்பு  அழைப்பாளராக மாநில துணை பொருளாளர் 
திரு.G .K .நாகராஜ் அவர்கள்  கலந்து கொண்டனர் . ஆர்பாட்டத்தில் பின்வரும்  கோரிக்கைகள்  முன்வைத்து  முழக்கங்கள்  எழுப்பப்பட்டன .
  • தமிழ்நாட்டில்  நிலவிவரும்  அபரிமிதமான  மின்வெட்டை  உடனடியாக  தளர்த்தி  தடையில்லா மின்சாரம்  வழங்கவேண்டும் .
  •  விசைத்தறி , பனியன்  தொழில்களுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் .
  • விவசாய் விளைபொருட்களுக்கு மாநில அரசு நியாயமான விலைநிர்ணயம்  செய்யவேண்டும் .
  •  ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை  விவசாயத்திற்கு பயன்படுத்த  ஆவண செய்ய வேண்டும் .
ஆர்பாட்டத்தில்  திரளான  மாநில,மாவட்ட,ஒன்றிய, நகர,கிளை  நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . ஒன்றிய பேச்சாளர் திரு .ஜெயச்சந்திரன் நாயக்கர் நன்றி  கூறினார் .
நன்றி ! நன்றி !
கொங்கு சங்கர்
                                                                                                

Wednesday, March 7, 2012

கொங்கு நாட்டு காவலர் திரு. பெஸ்ட் ராமசாமி அய்யா அவர்களின் 68 வது பிறந்தநாள்




இன்று   68 வது பிறந்தநாள் காணும்  நமது கொங்கு நாட்டு  காவலர் திரு. பெஸ்ட் ராமசாமி அய்யா  அவரை  வாழ்த்த வயதின்றி  வணங்குகிறோம் ....அவரின்  அயராத  உழைப்பு  கொங்கு நாட்டிற்கு  தேவை .... அவர் பல்லாண்டு  வாழ எல்லாம்  வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்..........
நன்றி! நன்றி !      
கொங்கு சங்கர் 





Monday, March 5, 2012

அவினாசி ஒன்றிய ஆர்பாட்டம்


  •  தமிழ்நாட்டில் (சென்னை  தவிர ) நிலவி வரும் அபரிமிதமான  மின்வெட்டை உடனடியாக தளர்த்தி  தடையில்லா மின்சாரம் வழங்க  மாநில அரசை கோரியும் , கரும்பு  மஞ்சள் உட்பட...... 
  •  விவசாய்  விளைபொருட்களுக்கு  மாநில அரசு நியாயமான  விலை  நிர்ணயம்  செய்யகோரியும் ......
  •  விசைத்தறி , பனியன்  தொழில்களுக்கு  தடையில்லா மும்முனை  மின்சாரம்  வழங்ககோரியும் .......
  •  ஊரக  வேலைவாய்ப்பு  திட்டத்தை  விவசாயத்திற்கு பயன்படுத்த  கோரியும் ........
                     மாபெரும்  ஆர்பாட்டம்  நடைபெறுகிறது . எனவே , ஒன்றிய  நகர  கொ.மு .க வினர் , பொதுமக்கள் , பொது நலன்  நாடுவோர்  அனைவரும்  தவறாது கலந்து கொண்டு ஆதரவு  தர வேண்டுகிறோம் ....
  
நன்றி ! நன்றி !   
கொங்கு சங்கர் 

Saturday, March 3, 2012

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாபெரும் ஆர்பாடாம்

வருகின்ற  மார்ச் 9 ஆம் தேதி  (வெள்ளி கிழமை) "அபரிமிதமான  மின்வெட்டுக்கு மற்றும் விவசாய  விளைபொருட்களுக்கு  நியாயமான  விலை  நிர்ணயம்  செய்ய  அரசை வலியுறுத்தி" ஆர்பாட்டம் .

 தேதி :  09.03.2012
 இடம்  : பாலச்சந்தர்  மருத்துவமனை , அவினாசி 
 நேரம் : காலை 9  மணி  

நன்றி !! நன்றி !! 
கொங்கு சங்கர்